ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து
எவ்வளை நெகிழ மேனி வாடப் பல்லிதல் ஊண்கண் பனி அலைக் கலங்கத் துறந்தோன் மன்ற மறங்கெழு குருசில் அதுமற்று உண்ர்ந்தனை போலாய் இன்னும் வருதி என்அவர் தகவே. | 471 |
கைவல் சீறியாழ் பாண நுமரே செய்த பருவம் வந்துநின் றதுவே எம்மின் உணரா ராயினும் தம்வயின் பொய்படு கிளவி நாணலும் எய்யார் ஆகுதல் நோகோ யானே. | 472 |
பலர்புகழ் சிரப்பின்நும் குருசில் உள்ளிச் செலவுநீ நய்னதனை யாயின் மன்ற இன்னா அரும்படர் எம்வயின் செய்த பொய்வ லாளர் போலக் கைவல் பாணஎம் மறாவா தீமே. | 473 |
மையறு சுடர்நுதல் விளங்கக் கறுத்தோர் செய்யரண் சிதைத்த செருமிகு தானையொடு கதம்பரி நெடுட்ந்தேர் அதர்படக் கடைஇச் சென்றவர்த் தருகுவல் என்னும் நன்றால் அம்ம பாணனது அறிவே. | 474 |
நொடிநிலை கலங்க வாடிய தோளும் வடிநலன் இழந்தஎன் கண்ணும் நோக்கிப் பெரிதுபுலம் பிணனே சீறியாழ்ப் பாணன் எம்வெம் காதலொடு பிரிந்தோர் தம்மோன் போலான் பேரன் பினனே. | 475 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 48. பாணன் பத்து, பாணன், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, பத்து, கைவல், செய்த, குருசில், சங்க, எட்டுத்தொகை, மன்ற