ஐங்குறுநூறு - 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து
உள்ளார் கொல்லோ தோழி வெள்ளிதழ்ப் பகல்மதி உருவைல் பகன்றை மாமலர் வெண்கொடி ஈங்கை பைம்புதல் அணியும் அரும்பனி அளை இய கூதிர் ஒருங்கிவண் உறைதல் தெளிந்தகன் றோரே. | 456 |
பெய்பன் நலிய உய்தல்செல் லாது குருகினம் நரலும் பிரிவருங் காலைத் த்றந்தமை கல்லார் காதலர் மறந்தமை கல்லாது என் மடங்கெழு நெஞ்சே. | 457 |
துணர்க்காய்க் கொன்றைக் குழற்பழம் ஊழ்த்தன் அதிர்பெர்ய்ர்க்கு எதிரிய சிதர்கொள் தண்மலர் பாணர் பெருமகன் பிரிந்தென மாண்நலம் இழந்தஎன் கண்போன் றனவே. | 458 |
மெலிறைப் பணைத்தோள் பசலை தீரப் புல்லவும் இயைவது கொல்லோ புல்லார் அரண்க டந்த சீர்கெழு தானை வெல்போர் வேந்தனொடு சென்றா நல்வய லூரன் நறுந்தண் மார்பே. | 459 |
பெரு ஞ்சின வென்ந்தனும் பாசறை முனியான் இருங்கலி வெற்பன் தூதும் தோன்றா ததை இலை வாழை முழுமுதல் அசைய இன்னா வாடையும் அலைக்கும் என்ஆகு வன்கொல் அளியென் யானே. | 460 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 46. பருவங்கண்டு கிழத்தி யுரைத்த பத்து, இலக்கியங்கள், பருவங்கண்டு, பத்து, ஐங்குறுநூறு, கிழத்தி, யுரைத்த, கொல்லோ, சங்க, எட்டுத்தொகை