ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து
நன்றே காதலர் சென்ற ஆறே நன்பொன் அன்ன சுடரிணர்க் கொன்றையொடு மலர்ந்த குருந்துமா ருடைத்தே. | 436 |
நன்றே காதலர் சென்ற ஆறே ஆலித் தண்மழை தலைஇய வாலிய மலர்ந்த முல்லையும் உடைத்தே. | 437 |
நன்றே காதலர் சென்ற ஆறே பைம்புதல் பம்பூ மலர இன்புறத் தருந பண்புமார் உடைத்தே. | 438 |
நன்றே காதலர் சென்ற ஆறே குருந்தக் கண்ணிக் கோவலர் பெருந்தண் நிலைய பாக்கமும் உடைத்தே. | 439 |
நன்றே காதலர் சென்ற ஆறே தன்பெயல் அளித்த பொழுதின் ஒண்சுடர்த் தோன்றியும் தளவமும் உடைத்தே. | 440 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 44. புறவணிப் பத்து, சென்ற, நன்றே, காதலர், உடைத்தே, இலக்கியங்கள், ஐங்குறுநூறு, புறவணிப், பத்து, மலர்ந்த, எட்டுத்தொகை, சங்க