ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து
மாலை வெண்காழ் காவலர் வீச நறும்பூம் புறவின் ஒடுங்குமுயல் இரியும் புன்புல நாடன் மடமகள் நலங்கினர் பணைத்தோள் விலங்கின செலவே. | 421 |
கடும்பரி நெடுந்தேர்க் கால்வல் புரவி நெடுங்கொடி முல்லையொடு தளவமதிர் உதிர விரையுபு கடை இநாம் செல்லின் நிரைவளை முன்கை வருந்தலோ இலளே. | 422 |
மாமலை இடியூஉத் தளீசொரிந் தன்றே வாள்நுதல் பசப்பச் செலவயர்ந் தனையே யாமே நிந்துறந்து அமையலம் ஆய்மலர் உண்கணும் நீர்நிறைந் தனவே. | 423 |
புறவணி நாடன் காதல் மடமகள் ஒண்ணுதல் பசப்ப நீசெலின் தெண்ணீர்ப் போதவிழ் தாமரை அன்னநின் காதலன் புதல்வன் அழும்இனி முலைக்கே | 424 |
புன்புறப் பேடை சேவல் இன்புற மன்னர் இயவரின் இரங்கும் கானம் வல்லை நெடுந்தேர் கடவின் அல்லல் அருநோய் ஒழித்தல் எமக் கெளிதே. | 425 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 43. விரவுப் பத்து, இலக்கியங்கள், விரவுப், ஐங்குறுநூறு, பத்து, மடமகள், நாடன், எட்டுத்தொகை, சங்க