ஐங்குறுநூறு - 32. செலவுப் பத்து
வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் ஆரிடைச் செல்வோர் ஆறுநனி வெரூஉம் காடுஇறந் தனரே காதலர் நீடுவர் கொல்என நினையும்என் நெஞ்சே. | 311 |
அறஞ்சா லியரோ அறஞ்சா லியரே வறனுண் டாயினும் அறஞ்சா லியரோ வாள்வனப் புற்ற அருவிக் கோள்வல் என்னையை மறிந்த குன்றே. | 312 |
தெறுவது அம்ம நும்மகள் விருப்பே உறுதுயர் அவலமொடு உயிர்செலச் சாஅய்ப் பாழ்படு நெஞ்சம் படர் அடக் கலங்க நாடுஇடை விலங்கிய வைப்பின் காடுஇறந் தனள்நம் காத லோனே | 313 |
அவிர்தொடி கொட்பக் கழுதுபுகவு அயரக் கர்ங்கண் காக்கையொடு கழுகுவிசும்பு அகலச் சிறுகண் யானை ஆள்வீழ்துத் திரித்ரும் நீளிடை அருஞ்சுரம் என்பநம் தோளிடை முனிநர் சென்ற ஆறே. | 314 |
பாயல் கொண்ட பனிமலர் நெடுங்கண் பூசல் கேளார் சேயர் என்ப விழைநெகிழ் செல்லல் உறீஇக் கழைமுதிர் சோலைக் காடுஇறந் தோரே. | 315 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 32. செலவுப் பத்து, இலக்கியங்கள், செலவுப், அறஞ்சா, ஐங்குறுநூறு, பத்து, காடுஇறந், லியரோ, சங்க, எட்டுத்தொகை