ஐங்குறுநூறு - 31. செலவு அழுங்குவித்த பத்து
மால்வெள் ளோத்திரத்து மையில் வாலிணர் அருஞ்சுரம் செல்வோர் சென்னிக் கூட்டும் அவ்வரை யிறக்குவை யாயின் மைவரை நாட வருந்துவள் பெரிதே. | 301 |
அரும்பெருள் செய்வினை தப்பற்கும் உரித்தே பெருந்தோள் அரிவை தகைத்தற்கும் உரியள் செல்லாய் அயினோ நன்றே மல்லம் புலம்ப இவள்அழப் பிரிந்தே. | 302 |
புதுக்கலத் தன்ன கனிய ஆலம் போகில்தனைத் தடுக்கும் வேனில் அருஞ்சுரம் தண்ணிய இனிய வாக எம்மொடுஞ் சென்மோ விடலை நீயே. | 303 |
கல்லாக் கோவலர் கோலின் தோண்டிய ஆன்நீர்ப் பத்தல் யானை வெளவும் கல்லதர்க் கவலை செல்லின் மெல்லியல் புயல்நெடுங் கூந்தல் புலம்பும் வயமான் தோன்றல் வல்லா தீமே. | 304 |
களிறு பிடிதழீஇப் பிறபுலம் படராது பசிதின வருத்தம் பைதறு குன்றத்துச் சுடர்தொடிக் குறுமகள் இனைய எனப்பயஞ் செய்யுமோ விடலைநின் செலவே. | 305 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 31. செலவு அழுங்குவித்த பத்து, இலக்கியங்கள், செலவு, ஐங்குறுநூறு, அழுங்குவித்த, பத்து, அருஞ்சுரம், சங்க, எட்டுத்தொகை