ஐங்குறுநூறு - 30. மஞ்ஞைப் பத்து.
மயில்கள் ஆலக் குடிஞை இரட்டும் துறுகல் அடுக்கத்து அதுவே பணைத்தோள் ஆய்தழை நுடங்கும் அல்குல் காதலி உறையும் நனிநல் லூரே. | 291 |
மயில்கள் ஆலப் பெருந்தேன் இமிரத் தண்மழை தழீஇய மாமலை நாட நின்னினும் சிறந்தனள் எமக்கே நீநயந்து நன்மனை அருங்கடி அயர எம்நலம் சிறப்பயாம் இனிப்பெற் றோளே. | 292 |
சிலம்புகமழ் காந்தன் நறுங்குலை யன்ன நலம்பெறு கையின்என் கண்புதைத் தோயே பாயல் இந்துணை யாகிய பணைத்தோள் தோகை மாட்சிய மடந்தை நீயலது உளரோஎன் நெஞ்சமர்ந் தோரே. | 293 |
எரிமருள் வேங்கை இருந்த தோகை இழையணி மடந்தையின் தோன்றும் நாட இனிதுசெய் தனையால் நுந்தை வாழியர் நன்மனை வதுவை அயர இவள் பின்னருங் கூந்தல் மலர் அணிந் தோரே. | 294 |
வருவது கொல்லோ தனே வாராது அவணுறை மேவலின் அமைவது கொல்லோ புனவர் கொள்ளியின் புகல்வரும் மஞ்ஞை இருவி யிருந்த குருவி வருந்துறப் பந்தாடு மகளிரின் படர்தரும் குன்றுகெழு நாடனொடு சென்றஎன் நெஞ்சே. | 295 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 30. மஞ்ஞைப் பத்து., இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, மஞ்ஞைப், தோகை, தோரே, கொல்லோ, நன்மனை, மயில்கள், எட்டுத்தொகை, சங்க, பணைத்தோள்