ஐங்குறுநூறு - 2. வேழப்பத்து
ஓங்குபூ வேழத்துத் தூம்புடைத் திரள்கால் சிறுதொழு மகளிர் அஞ்சனம் பெய்யும் பூக்கஞல் ஊரனை யுள்ளிப் பூப்போல் உண்கண் பொன்போர்த் தனவே. | 16 |
புதன்மிசை நுடங்கும் வேழ வெண்பூ விசும்பாடு குருகின் தன்றும் ஊரன் புதுவோர் மேவலன் ஆகலின் வறிதா கின்றுஎன் மடங்கெழு நெஞ்சே. | 17 |
இருஞ்சா யன்ன செருந்தியொடு வேழம் கரும்பின் அலம்ரும் கழனி ஊரன் பொருந்து மல ரன்னஎன் கண்ணழப் பிரிந்தனன் அல்லனோ பிரியலென் என்றே. | 18 |
எக்கர் மாஅத்துப் புதுப்பூம் பெருஞ்சினை புணர்ந்தோர் மெய்ம்மணங்க் கமழும் தண்பொழில் வேழவெண்பூ வெள்ளுகை சீக்கும் ஊரன் ஆகலின் கலங்கி மாரி மலரின் கண்பனி யுகுமே. | 19 |
அறுசில் கால அஞ்சிறைத் தும்பி நூற்றிதழ்த் தாமரைப் பூச்சினை சீக்கும் காம்புகண் டன்ன தூம்புடை வேழத்துத் துறைநணி யூரனை உள்ளியென் இறையேர் எல்வளை நெகிழ்புஓ டும்மே. | 20 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 2. வேழப்பத்து, இலக்கியங்கள், ஊரன், ஐங்குறுநூறு, வேழப்பத்து, சீக்கும், ஆகலின், எட்டுத்தொகை, வேழத்துத், சங்க