ஐங்குறுநூறு - 29. கிள்ளைப் பத்து
வெள்ள வரம்பின் ஊழி போகியும் கிள்ளை வாழிய பலவே ஒள்ளிழை இரும்பல் கூந்தல் கொடிச்சி பெருந்தோள் காவல் காட்டி யவ்வே. | 281 |
சாரல் புறத்த பெருங்குரல் சிறுதினைப் பேரமர் மழைக்கண் கொடிச்சி கடியவும் சோலைச் சிறுகிளி உன்னு நாட அரிருள் பெருகின வாரல் கோட்டுமா வாழங்கும் காட்டக நெறியே. | 282 |
வன்கண் கானவன் மென்சொல் மடமகள் புன்புல மயக்கத்து உழுத ஏஅனல் பைம்புறச் சிறுகிளி கடியும் நாட பெரிய கூறி நீப்பினும் பொய்வலைப் படூஉம் பெண்டுதவப் பலவே. | 283 |
அரிய தாமே செவ்வாய்ப் பைங்கிளி குன்றக் குறவர் கொய்தினைப் பைங்கால் இருவை நீள்புனங் கண்டும் பிரிதல் தேற்றாப் பேரன் பினவே. | 284 |
பின்னிருங் கூந்தல் நன்னுதல் குறமகள் மெல்தினை நுவனை யுண்டு தட்டையின் ஐவனச் சிறுகிளி கடியும் நாட வீங்குவளை நெகிழப் பிரிதல் யாங்குவல் லுநையோ ஈங்கிவள் துறந்தே. | 285 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 29. கிள்ளைப் பத்து, இலக்கியங்கள், பத்து, சிறுகிளி, ஐங்குறுநூறு, கிள்ளைப், கடியும், பிரிதல், கொடிச்சி, பலவே, எட்டுத்தொகை, சங்க, கூந்தல்