ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து
நம்முறு துயரம் நோக்கி அன்னை வேலன் தந்தா ளாயின்அவ் வேலன் வெறிகமழ் நாடன் கேண்மை அறியுமோ தில்ல செறியெயிற் றோயே. | 241 |
அறியா மையின் வெறியென மயங்கி அன்னையும் அருந்துயர் உழந்தனள் அதனால் எய்யாது விடுதலோ கொடிதே நிரையிதழ் ஆய்மலர் உண்கண் பசப்பச் சேய்மலை நாடன் செய்த நோயே. | 242 |
கறிவளர் சிலம்பின் கடவுள் பேணி அறியா வேலன் வெறியெனக் கூறும் அதுமனம் கொள்குவை அனையிவள் புதுமலர் மழைக்கண் புலம்பிய நோய்க்கே. | 243 |
அம்ம வாழி தோழி பன்மலர் நறுந்தண் சோலை நாடுகெழ நெடுந்தகை குன்றம் பாடான் ஆயின் என்பயஞ் செய்யுமோ வேலற்குஅவ் வெறியே. | 244 |
பொய்யா மரபின் ஊர்முகு வேலன் கலங்குமெய்ப் படுத்துக் கன்னந் தூக்கி முருகென மொழியும் ஆயின் கெழுதகை கொல் இவள் அணங்கி யோற்கே. | 245 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 25. வெறிப்பத்து, வேலன், இலக்கியங்கள், வெறிப்பத்து, ஐங்குறுநூறு, ஆயின், அறியா, நாடன், எட்டுத்தொகை, சங்க