ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து
குறுங்கை இரும்புலிக் கோள்வல் ஏற்ரை நெடும்புதல் கானத்து மடப்பிடி ஈன்ற நடுங்குநடைக் குழவி கொளீஇய பலவின் பழந்தாங்கு கொழுநிழல் ஒளிக்கும் நாடற்குக் கொய்திடு தளிரின் வாடிநின் மெய்பிறி தாதல் எவன்கொல் அன்னாய். | 216 |
பெருவரை வேண்க்கைப் பொன்மருள் நறுவீ மானினப் பெருங்கிளை மேயல் ஆரும் கானக நாடன் வரவுமிவண் மேனி பசப்பது எவன்கொல் அன்னாய். | 217 |
நுண்ணேர் புருவத்த கண்ணும் ஆடும் மயிர்வார் முன்கை வளையும் சொறூஉம் களிறுகோள் பிழைத்த கதஞ்சிறந்து எழுபுலி எழுதரு மழையின் குழுமும் பெருங்கள் நாடன் வருங்கொல் அன்னாய். | 218 |
கருங்கால் வேங்கை மாத்தகட்டு ஒள்வீ இருங்கள் வியலறை வரிப்பத் தாஅம் நன்மலை நாடன் பிரிந்தென ஒண்ணுதல் பசப்பது எவன்கொல் அன்னாய். | 219 |
அலங்குமழை பொழிந்த அகன்கண் அருவி ஆடுகழை அடுக்கத்து இழிதரு நாடன் பெருவரை யன்ன திருவிறல் வியன்மார்பு முயங்காது கழிந்த நாள்இவள் மயங்கிதழ் மழைக்கண் கலிழும் அன்னாய். | 220 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 22. அன்னாய்ப் பத்து, அன்னாய், நாடன், இலக்கியங்கள், பத்து, ஐங்குறுநூறு, எவன்கொல், அன்னாய்ப், பசப்பது, சங்க, பெருவரை, எட்டுத்தொகை