ஐங்குறுநூறு - 21. அன்னாய் வாழிப் பத்து
அன்னாய்
வாழிவேண் டன்னை என்னை தானும் மலைந்தான் எமக்கும் தழையாயின பொன்வீ மணியரும் பினவே என்ன மரம்கொல்அவர் சாரல் அவ்வே. | 201 |
அன்னாய் வாழிவேண் டன்னை நம்மூர்ப் பார்ப்பனக் குறுமகப் போலத் தாமும் குடுமித் தலைய மன்ற நெடுமலை நாடன் ஊர்ந்த மாவே. | 202 |
அன்னாய் வாழிவேன் டன்னைநம் படப்பை தேன்மயங்கு பாலினும் இனிய அவர்நாட்டு உவலை கூவற் கீழ மானுண்டு எஞ்சிய கலிழி நீரே. | 203 |
அன்னாய் வாழிவேண் டன்னைஅது எவன்கொல் வரையர மகளிரின் நிரையுடன் குழீஇப் பெயர்வழிப் பெயர் வழித் தவிராது நோக்கி நல்லள் நல்லள் என்ப தீயேன் தில்ல மலைகிழ வோர்க்கே. | 204 |
அன்னாய் வாழிவேண் டன்னையென் தோழி நனிநான் உடையள் நின்னும் அஞ்சும் ஒலிவெள் ளருவி ஓங்குமலை நாடன் மலர்ந்த மார்பின் பாயல் துஞ்சிய வெய்யள் நோகோ யானே. | 205 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 21. அன்னாய் வாழிப் பத்து, அன்னாய், இலக்கியங்கள், வாழிவேண், ஐங்குறுநூறு, வாழிப், பத்து, நாடன், நல்லள், சங்க, எட்டுத்தொகை, டன்னை