ஐங்குறுநூறு - 20. வளைப் பத்து.
கடற்கோடு செறிந்த வளைவார் முன்கைக் கழிப்புத் தொடர்ந்த இடும்பல் கூந்தல் கானல் ஞாழற் கவின்பெறு தழையள் வரையர மகளிரின் அரியள்என் நிறையரு நெஞ்சம் கொண்டொளித் தோளே. | 191 |
கோடுபுலங் கொட்பக் கடலெழுந்து முழுங்கப் பாடிமிழ் பனித்துறை யோடுகலம் உகைக்கும் துறைவன் பிரிந்தென நெகிழ்ந்தன வீங்கின மாதோ தொழிஎன் வளையே. | 192 |
வலம்புரியுழுத வார்மணல் அடைகரை இலங்குகதிர் முத்தம் இருள்கெட இமைக்கும் துரைகெழு கொண்கநீ தந்த அறைபுனல் வால்வளை நல்லவோ தாமே. | 193 |
கடற்கோ டறுத்த அரம்போழ் அவ்வளை ஒள்தொடி மடவரல் கண்டிக்கும் கொண்க நன்னுதல் இன்றுமால் செய்தெனக் கொன்ஒன்று கடுத்தனள் அன்னையது நிலையே. | 194 |
வளைபடு முத்தம் பரதவர் பகரும் கடல்கெழு கொண்கன் காதல் மடமகள் கெடலரும் துயரம் நல்கிப் படலின் பாயல் நல்கி யோளெ. | 195 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 20. வளைப் பத்து., இலக்கியங்கள், வளைப், ஐங்குறுநூறு, பத்து, முத்தம், எட்டுத்தொகை, சங்க