ஐங்குறுநூறு - 19. நெய்தற் பத்து.
நெய்தல் உண்கண் ஏர் இறைப் பணைந்தோள் பொய்தல் ஆடிய பொய்யா மகளிர் குப்பை வெண்மணல் குரவை நிறூஉந் துறைகெழு கொண்கன் நல்கி உறைவுஇனிது அம்மஇவ் அழுங்கள் ஊரே. | 181 |
நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் அருந்திறல் கடவுள் அல்லன் பெருந்துறைக் கண்டுஇவள் அணங்கி யோனே. | 182 |
கணங்கொள் அருவிக் கான்கெழு நாடன் குறும்பொறை நாடன் நல்வய லூரன் தண்கடற் சேர்ப்பன் பிரிந்தெனப் பண்டையிற் கடும்பகல் வருதி கையறு மாலை கொடுங்கழி நெய்தலும் கூம்பக் காலை வரினும் களைஞரோ இலரே. | 183 |
நெய்தல் இருங்கழி நெய்தல் நீக்கி மீனுநுண் குருகுஇளங் கானல் அல்கும் கடல்அணிந் தன்றுஅவர் ஊரே கடலினும் பெரிதுஎமக்கு அவருடை நட்பே. | 184 |
அலங்கிதழ் நெய்தல் கொற்கை முன்துறை இலங்குமுத்து உறைக்கும் எயிறுகெழு துவர்வாய் அரம்போழ் அவ்வளைக் குறுமகள் நரம்புஆர்த் தன்ன தீங்கிள வியனே. | 185 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 19. நெய்தற் பத்து., நெய்தல், இலக்கியங்கள், நெய்தற், ஐங்குறுநூறு, பத்து, நாடன், எட்டுத்தொகை, சங்க