ஐங்குறுநூறு - 18. தொண்டிப் பத்து.
திரைஇமிழ் இன்னிசை அளைகி அயலது முழவுஇமிழ் இன்னிசை மறுகுதொறு இசைக்கும் தொண்டி அன்ன பணைத்தோள் ஒள்தொடி அரிவைஎன் நெஞ்சுகொண் டோளே. | 171 |
ஒள்தொடி அரிவை கொண்டனள் நெஞ்சே வண்டிமிர் பனித்துறைத் தொண்டி ஆங்கண் உரவுக் கடல்ஒலித் திரையென இரவி னானும் துயிலறி யேனே. | 172 |
இரவி னானும் இந்துயில் அறியாது அரவுறு துயரம் எய்துப தொண்டித் தண்நறு நெய்தல் நாறும் பின்இருங் கூந்தல் அணங்குற் றோரே. | 173 |
அணங்குடைப் பனித்துறைத் தொண்டி யன்ன மணங்கமழ் பொழிற்குறி நல்கினள் நுணங்கு இழை பொங்கரி பரந்த உண்கண் அம்கலில் மேனி அசைஇய எமக்கே. | 174 |
எமக்குநயந் தருளினை யாயின் பணைத்தோள் நல்நுதல் அரிவையொடு மென்மெல இயலி வந்திசின் வாழியா மடந்தை தொண்டி யன்னநின் பண்புல கொண்டே. | 175 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 18. தொண்டிப் பத்து., இலக்கியங்கள், தொண்டி, ஐங்குறுநூறு, பத்து, தொண்டிப், பனித்துறைத், இரவி, னானும், ஒள்தொடி, இன்னிசை, எட்டுத்தொகை, சங்க, பணைத்தோள்