ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து.
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை கருங்கோட்டுப் புன்னைத் தங்கும் துறைவற்குப் பயந்தநுதல் அழியச் சாஅய் நயந்த நெஞ்சம் நோய்ப்பா ல்தே. | 161 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை நீத்துநீர் இருங்கழி இரைதேர்ந்து உண்டு பூக்கமழ் பொதும்பர்ச் சேக்கும் துறைவன் சொல்லோ பிறவா யினவே. | 162 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழித் துவலை ஒலியில் துஞ்சும் துறைவன் துறந்தெனத் துறந்துஎன் இறையேர் முன்கை நீக்கிய வளையே. | 163 |
இருங்கடற் கரையது சிறுவெண் காக்கை இருங்கழி மருங்கின் அயிரை ஆரும் தண்ணந் துறைவன் தகுதி நம்மோடு அமையாது அலர்பயந் தன்றே. | 164 |
பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை ஆருகழிச் சிறுமீன் ஆர மாந்தும் துறைவன் சொல்லிய சொல்என் இறையோர் எல்வளை கொண்டுநின் றதுவே. | 165 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 17. சிறுவெண் காக்கைப் பத்து. , சிறுவெண், கரையது, காக்கை, இலக்கியங்கள், பெருங்கடற், துறைவன், காக்கைப், பத்து, ஐங்குறுநூறு, இருங்கழி, சங்க, எட்டுத்தொகை