ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை மிதிப்ப நக்க கண்போல் நெய்தல் கள்கமழ்ந்து ஆனாத் துறைவற்கு நெக்க நெஞ்சம் நேர்கல் லேனே. | 151 |
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கையறுபு இரற்றும் கானலம் புலம்பம் துரைவன் வரையும் என்ப அறவன் போலும் அருளுமார் அதுவே. | 152 |
வெள்ளாங் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை உளர ஒழிந்த தூவி குலவுமணல் போர்வின் பெறூஉம் துறைவன் கேண்மை நன்னெடுங் கூந்தல் நாடுமோ மற்றே. | 153 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை கானற் சேக்கும் துறைவனோடு யானெவன் செய்கோ பொய்க்கும் இவ்வூரே. | 154 |
வெள்ளாங்க் குருகின் பிள்ளை செத்தெனக் காணிய சென்ற மடநடை நாரை பதைப்பத் ததைந்த நெய்தல் கழிய ஓதமொடுபெயரும் துறைவதற்குப் பைஞ்சாய்ப் பாவை ஈன்றனென் யானே. | 155 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 16. வெள்ளங் குருகுப் பத்து, காணிய, செத்தெனக், சென்ற, மடநடை, நாரை, பிள்ளை, குருகின், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, வெள்ளாங், குருகுப், பத்து, வெள்ளங், வெள்ளாங்க், நெய்தல், எட்டுத்தொகை, சங்க