ஐங்குறுநூறு - 15. ஞாழற் பத்து
எக்கர் ஞாழல் செருந்தியொடு கமழத் துவலைத் தண்துளி வீசிப் பயலை செய்தன பனிபடு துறையே. | 141 |
எக்கர் ஞாழல் இறங்கு இணர்ப் படுசினைப் புள்இறை கூரும் துறைவனை உள்ளேன் தொழி படீஇயர்என் கண்ணே. | 142 |
எக்கர் ஞாழல் புள்ளிமிழ் அகன்துறை இனிய செய்த நின்றுபின் முனிவு செய்தஇவள் தடமெல் தோளே. | 143 |
எக்கர் ஞாழல் இணர்படு பொதும்பர்த் தனிக்குரு உறங்கும் துறைவற்கு இனிப்பசந் தன்றுஎன் மாமைக் கவினே. | 144 |
எக்கர் ஞாழல் சிறியிலைப் பெருஞ்சினை ஓதம் வாங்கும் துறைவன் மாயோள் பசலை நீக்கினன் இனியே. | 145 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 15. ஞாழற் பத்து, ஞாழல், எக்கர், இலக்கியங்கள், ஐங்குறுநூறு, பத்து, ஞாழற், எட்டுத்தொகை, சங்க