ஐங்குறுநூறு - 13. கிழவற்கு உரைத்த பத்து
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே முண்டகக் கோதை நனையத் தெண்டிரைப் பௌவம் பாய்ந்துநின் றோளே. | 121 |
கண்டகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒள்ளிழை உயர்மணல் வீழ்ந்தென வெள்ளாங் குருகை வினைவு வோளே. | 122 |
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே ஒண்ணுதல் ஆயம் ஆர்ப்பத் தண்ணென் பெருங்கடல் திரைபாய் வோளே. | 123 |
கண்டிகும் அல்லமோ கொண்கநின் கேளே வண்டற் பாவை வெளவலின் நுண்பொடி அளைஇக் கடல்தூர்ப் போளே. | 124 |
கண்டிகும் அல்லமோ கொண்கநின் தெண்டிரை பாவை வெளவ ஊண்கண் சிவப்ப அழுதுநின் றோளே. | 125 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 13. கிழவற்கு உரைத்த பத்து, அல்லமோ, கொண்கநின், கேளே, கண்டிகும், இலக்கியங்கள், உரைத்த, ஐங்குறுநூறு, பத்து, கிழவற்கு, பாவை, வோளே, றோளே, எட்டுத்தொகை, சங்க