ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து
நெறிமருப்பு எருமை நீலைரும் போத்து வெறிமலர்ப் பொய்கை ஆம்பல் மயக்கும் கழனியூரன் மகளிவள் பழன வெதிரின் கொடிப்பிணை யலளே. | 91 |
கருங்கோட்டு எருமைச் செங்கண் புனிற்றுஆக் காதற் குழவிக்கு ஊறுமுலை மடுக்கும் நுந்தை நும்மூர் வருதும் ஒண்தொடி மடந்தை நின்னையாம் பெறினே. | 92 |
எருமைநல் ஏற்றினம் மேயல் அருந்தெனப் பசுமோ ரோடமோடு ஆம்பல் ஒல்லா செய்த இனைய மன்ற பல்பொழில் தாதுண வெறுக்கைய ஆகி இவள் போதுஅவிழ் முச்சி யூதும் வண்டே. | 93 |
மள்ளர் அன்ன தடங்கோட்டு எருமை மகளிர் அன்ன துணையோடு வதியும் நிழல்முதிர் இலஞ்சிப் பழனத் ததுவே கழனித் தாமரை மலரும் கவின்பெறு சுடர்நூதல் தந்தை ஊரே. | 94 |
கருங்கோட்டு எருமை கயிறுபரிந்து அசைஇ நெடுங்கதிர் நெல்லின் நாள்மேயல் ஆரும் புனல்முற் றூரன் பகலும் படர்மலி அருநோய் செய்தனன் எமக்கே. | 95 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஐங்குறுநூறு - 10. எருமைப் பத்து, இலக்கியங்கள், எருமைப், எருமை, ஐங்குறுநூறு, பத்து, அன்ன, கருங்கோட்டு, சங்க, எட்டுத்தொகை, ஆம்பல்