28. ஞானம் பிரியாமை - ஞானக் குறள்

| பிறந்திட மாலிடம் பேரா திருப்பின் இறந்திடம் வன்னி யிடம். |
271 |
| சாகா திருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு. |
272 |
| வெளியில் விளைந்த விளைவின் கனிதான் ஒளியி லொளியா யுறும். |
273 |
| மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை. |
274 |
| குருவாம் பரநந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு. |
275 |
| சுந்திரச் சோதி துலங்கு மிடமது மந்திரச் சக்கரமு மாம். |
276 |
| தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது பாராப் பராபரம் பார். |
277 |
| ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன் நீரொளி மீது நிலை. |
278 |
| அந்தமு மாதியு மில்லா வரும்பொருள் சுந்தர ஞானச் சுடர். |
279 |
| இதுமுத்தி சாதனமென் றேட்டில் வரைந்து பதிவைத் தனன்குரு பார். |
280 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
28. ஞானம் பிரியாமை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - பார்