27. ஞான நிலை - ஞானக் குறள்

| தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை. |
261 |
| தற்புருட மாமுகமேற் றாரகை தன்மேலே நிற்பது பேரொளி நில். |
262 |
| ஓதிய தற்புரு டத்தடி யொவ்வவே பேதியா தோது பிணை. |
263 |
| கொழுந்துறு வன்னி கொழுவுற வொவ்வில் எழுந்தா ரகையா மிது. |
264 |
| மறித்துக் கொளுவிடு வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு. |
265 |
| காலுந் தலையு மறிந்து கலந்திடில் சாலவும் நல்லது தான். |
266 |
| பொன்னொடு வெள்ளியி ரண்டும் பொருந்திடில் அன்னவன் றாளதுவே யாம். |
267 |
| நின்ற வெழுத்துட னில்லா வெழுத்தினை யொன்றுவிக் கிலொன் றேயுள. |
268 |
| பேசா வெழுத்துடன் பேசுமெழுத்துறில் ஆசான் பரநந்தி யாம். |
269 |
| அழியா வுயிரை யவனுடன் வைக்கில் பழியான தொன்றில்லை பார். |
270 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
27. ஞான நிலை - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - யாம், வன்னி, தற்புருட