17. உருபாதீதம் - ஞானக் குறள்

| கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு. |
161 |
| பிறத்த லொன்றின்றிப் பிறவாமை வேண்டில் அறுத்துருவ மாற்றி யிரு. |
162 |
| உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில் கருவேது மில்லை தனக்கு. |
163 |
| கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சை யறுத்துருவ மாற்றி யிரு. |
164 |
| அனைத்துருவ மெல்லா மறக்கெடுத்து நின்றால் பினைப்பிறப் பில்லையாம் வீடு. |
165 |
| நினைப்பு மறப்பற்று நிராகரித்து நின்றால் தனக்கொன்று மில்லை பிறப்பு. |
166 |
| குறித்துருவ மெல்லாங் குறைவின்றி மாற்றில் மறித்துப் பிறப்பில்லை வீடு. |
167 |
| பிதற்று முணர்வை யறுத்துப் பிரபஞ்ச விகற்ப முணர்வதே வீடு. |
168 |
| பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி அறுத்துருவ மாற்றி யிரு. |
169 |
| ஓசை யுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றக்கால் பேசவும் வேண்டா பிறப்பு. |
170 |
தேடல் தொடர்பான தகவல்கள்:
17. உருபாதீதம் - ஞானக்குறள் - Avvaiyar Books - அவ்வையார் நூல்கள் - வீடு, யிரு, மாற்றி, பிறப்பு, நின்றால், மாற்றில், அறுத்துருவ, வேண்டில், மில்லை