பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300
பாரப்பா பனிரெண்டு மூன்றாரெட்டில் |
ஒரு சாதகனுக்கு 12,3,6,8 ஆகிய இடங்களில் அசுர குருவான சுக்ராச்சாரியார் பலமுடன் சஞ்சாரம் செய்வாரானால் அச்சாதகனுக்கு ஆயுள் குறைவதுடன், மர்ம உறுப்புகளில் [பீசத்தில்] நோயுறுதலும்,வாதநோய் ஏற்படுவதும் மிகவும் விளக்கம் பெற்ற செம்பொன் மற்றும் வாழ்மனையும் நஷ்டமாம். மேலும், மகோதரம்,பாண்டு ஆகிய நோய் மட்டுமல்லாமல் குன்மம், சயம், சோகை ஆகிய நோய்களும் ஏற்படும். ஆயினும் 12ஆம் இடத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்றால் சிவபரம்பொருளின் பேரருளால் சயன சுகமும் நல்ல யோகமும் ஏற்படும் எனக் கூறுவாயாக.
இப்பாடலில் சுக்கிரன் இலக்கினத்திலிருந்து 12,3,6,8 ஆகிய இடங்களில் அமரப் பிறந்த ஜாதகரரைப் பற்றிப் புலிப்பாணி விவரிக்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 49 - சுக்கிரன் 12,3,6,8 ல் தரும் பாதகம் - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், சுக்கிரன், ஆகிய, புலிப்பாணி, தரும், பாடல், பாதகம், ஏற்படும், astrology, இடங்களில்