பாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300
வீரப்பா யின்ன மொருவினையைக் கேளு |
வீரம் மிக்கவனே! இன்னமொரு பொருளையும் நீ கேட்பாயாக! தனஸ்தானாதிபதியும், பத்துக்குடையவனும், தனகாரகனும் வாகன ஸ்தானாதிபதியான நான்கிற்குடையவனும் 6,8,12 ஆகிய இடங்களில் நின்று பலமிழப்பினும் அச்சாதகன் சுகித்திருப்பான் என்பதற்குரிய காரணத்தைச் சொல்கிறேன் கேள்! அச்சாதகன் பூலோகத்தில் உள்ள மக்களுக்கு அதிகாரியாவான். எவ்வாறெனில் சூரியனுக்குப் பின் புதனும் செவ்வாயும் அடைவுடன் தனியாக இருப்பதே அதன் காரணம் என்று போகமா முனிவரின் பேரருட்கருணையால் புலிப்பாணி கூறினேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
பாடல் 127 - புலிப்பாணி ஜோதிடம் 300, ஜோதிடம், புலிப்பாணி, பாடல், அச்சாதகன், astrology