ஆரூடப் பாடல் 34 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩௪. (34) வந்தால்..
சதுர்கோண கேதுபகை சதிக்குள்ளாக்கும் சாராத குற்றமெல்லாம் சார்ந்ததேதீரும் பிதுர் சொத்து இருந்தாலும் பாழாப்போகும் பித்தமுடன் வாதகரம் தோஷங்காணும் கதிகலங்கி காசினியில் நிற்கநேரும் காதார துர்செய்தி கேட்கலாகும் விதிபிசகா தானாலும் மதியைக்கொண்டு மண்ணுலகில் வாரமெட்டு கழித்திடாயே. |
ஆரூடத்தில் முப்பத்திநான்கு வந்திருப்பது, உனக்கு கேது பகை பெற்றிருப்பதைக் குறிக்கும். செய்யாத தவறெல்லாம் செய்ததாக குற்றம் சாட்டப்படுவாய். குடும்ப சொத்து இருந்தாலும் பயன் தராது. பித்தம், வாதம் ஆகியவற்றால் உருவாகும் நோய்கள் உண்டாகும். செய்வதறியாது கலங்கி காசியில் சென்று நிற்க வேண்டி ஏற்படும். கெட்ட செய்திகளையே கேட்க வேண்டி ஏற்படும். இந்தப் பலன்களை மாற்ற முடியாது என்றாலும் அவதானமாக எட்டுவாரத்தைக் கடந்தாயானால் நன்மை உண்டாகும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 34 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், வேண்டி, ஏற்படும், உண்டாகும், சொத்து, horary, இருந்தாலும்