ஆரூடப் பாடல் 32 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௩௨. (32) வந்தால்..
குருபகவான் ஒன்பதிலே இருக்க நன்றாய் குவலயத்தில் சுபகாரியம் முடிக்கநன்றாம் சிறுவர்களை பள்ளிதனில் சேர்க்கநன்றாம் சிறப்புடனே வியாபாரம் செய்ய நன்றாம் உருக்கமுடன் மனைகோல மிகவும் நன்றாம் வெளியூர்க்கு போகவும் லாபமுண்டாம் பொருள்தனை கொடுக்கவும் வாங்கவும் நன்றாம் பிணிநீங்கும் மருந்துண்ண நன்மைதானே. |
ஆரூடத்தில் முப்பத்தியிரண்டு வந்திருப்பதால், ஒன்பதாவது வீட்டில் குருபகவான் இருப்பதைக் குறிக்கிறது. குடும்பதில் சுப காரியங்கள் செய்யவும், பிள்ளைகளை பாடசாலையில் சேர்க்கவும், புதிய வியாபாரமும் தொடங்கவும், நிலம் வாங்கவும், வீடுகட்டவும் நல்ல தருணமாக இது இருக்கிறது. வெளியூருக்கு போகும் வாய்ப்பும், கொடுக்கல் வாங்கல் செய்யவும், நோய் தீர மருந்து உட்கொள்ளவும் சிறப்பான காலம் இது என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 32 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், நன்றாம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், செய்யவும், வாங்கவும், horary, குருபகவான்