ஆரூடப் பாடல் 25 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௫. (25) வந்தால்..
குற்றமுள்ள கிரகமெல்லாம் விலகிப் போச்சு குடும்பத்தில் ஜெயகால முதவியாச்சு பற்றறவே பதிமூன்று நாளேபோனால் பாலகனே ஐந்தாண்டிற் குறைவேயில்லை சுற்றமுடன் வாழ்ந்திடுவாய் சுகமே கூடும் சுகவாழ்வும் மகப்பேறும் தொழிலும் ஓங்கும் அற்புதமாய் பொருள்சேரும் அரசனைப்போல் அகமகிழ் வாழ்ந்திடுவாய் அதிர்ஷ்டந்தானே. |
ஆரூடத்தில் இருபத்தி ஐந்து வந்திருப்பதால், இது நாள்வரை உனக்கு இடைஞ்சல்களை விளைவித்த கிரகங்கள் எல்லாம் இப்போது விலகிவிட்டது. இன்னும் பதிமூன்று நாட்கள் போனால் அடுத்த ஐந்து வருடத்திற்கு குறைவின்றி குடும்பத்தாருடன் மகிழ்வுடன் வாழ்வாய். குழந்தை பேறும், தொழில் விருத்தியும் உண்டாகும். சிறப்பாக பொருள் சேரும். அரசன் போல் வாழ்வாய் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 25 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், வாழ்வாய், ஐந்து, horary, பதிமூன்று, வாழ்ந்திடுவாய்