ஆரூடப் பாடல் 23 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௨௩. (23) வந்தால்..
பாரப்பா உந்தனைப்போல் பாக்கியசாலி அகிலமதில் நினைப்பதெல்லாம் ஜெயமேயாகும் பார்வேந்தன் போலுனக்கு பாக்யமுண்டாகும் பலதொழிலும் செய்திடவே லாபமுண்டாம் கார்வண்ணனருளால் பெண் குழந்தையுண்டாம் கவலையெல்லாம் தீருமதால் கலங்கவேண்டாம் சீர்பெறவே சனிவார விரதம்பூண்டு சிறப்புடனே நவக்கிரக பூசைசெய். |
ஆரூடத்தில் இருபத்திமூன்று வந்திருப்பதால், இனி உன் மனதில் நினைத்த எண்ணம் யாவும் பலிதமாகும். தொழிலில் அளவற்ற லாபம் உண்டாகி குடும்பத்தில் செல்வச் செழிப்பும், அரசன் போல் வாழ்வும் உருவாகும். பரந்தாமனின் கருணையால் மனையில் ஓர் பெண்குழந்தையும் பிறக்கும். அக்குழந்தையினால் குடும்பத்திலுள்ள பல கவலைகளும் நீங்கும். ஒவ்வொரு சனிக்கிழமையும் விரதமிருந்து நவக் கிரகங்களை வணங்கி வர வேண்டும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 23 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், சக்கரம், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், பாடல், horary