ஆரூடப் பாடல் 16 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧௬. (16) வந்தால்..
இவ்விடத்தி லிருந்தாலும் சுகமிராது இடம்விட்டு போனாலும் பயன்படாது கள்ளமன துள்ளவரை கருதொணாது கருத்தினிலே நினைத்தயெண்ணங் கைகூடாது உள்ளபடி நடந்தாலும் உருப்படாது உன்மனைவி மக்களுனக் கடங்கிடாது அல்லது உனைவிட்டு அகன்றிடாது அப்பனே மாதமொன்று கழித்திடாயே. |
ஆரூடத்தில் பதினாறு வந்திருப்பதால், இப்போது இருக்கும் இடமும் உனக்கு சுகப்படாது, வேறிடம் மாறினாலும் பயனில்லை. காரியத் தடை உண்டாகும். எண்ணிய எண்ணம் எதுவும் ஈடேறாது போகும். மனைவி, மக்களும் மதிக்கமாட்டார்கள். அடுத்த ஒரு மாதத்திற்கு இந்த நிலை நீடிக்கும். எனவே இந்தக் காலத்தில் கவனமுடன் நடந்து கொள்ள வேண்டுமென கூறுகிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 16 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், சக்கரம், ஆரூடச், ஸ்ரீஅகத்தியர், ஆரூடப், பாடல், horary