ஆரூடப் பாடல் 10 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௧o. (10) வந்தால்..
ஜெயகால முந்தனுக்கு உதவியாச்சு ஜென்மத்தில் சந்திரனும் உதயமானான் பயமில்லை தொழில் முறையில் லாபமுண்டு பாலகனே உன்மனதில் கவலை நீங்கும் நயம்பேசி குடிகெடுப்போர் நாசமாவார் நம்பியபேர்களை நீ யாதரிப்பாய் செயலாக மாடுமனை கொள்ளநன்றாம் சீக்கிரத்தில் தனலாப முனக்குண்டாமே. |
ஆரூடத்தில் பத்து வந்தால், உனக்கு ஜென்மத்தில் சந்திரன் இருப்பதால் செய்யும் தொழிலில் நல்ல லாபம் உண்டாகும். உன் மனக்கவலை நீங்கும். உன்னை நம்பி வருபவர்களை அன்புடன் ஆதரிக்கும் தன்மை கிடைக்கப்பெறும். நயமாகப் பேசி உனைக் கெடுக்க நினைக்கும் நயவஞ்சகர்கள் நாசமாவார்கள். மாடு, மனை வாங்க இதுவே நல்ல காலம் என்று சொல்லும் அகத்தியர், மேலும் விரைவில் உனக்கு தனலாபமும் வரும் என்கிறார்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 10 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடப், ஜோதிடம், சக்கரம், ஆரூடங்கள், ஆரூடச், பாடல், ஸ்ரீஅகத்தியர், உனக்கு, நல்ல, நீங்கும், வந்தால், horary, ஜென்மத்தில்