ஆரூடப் பாடல் 9 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௯. (09) வந்தால்..
ஆண்டவன் உனக்கு துணை இருப்பானப்பா அபப்னே நீ செய்வதெல்லாம் லாபமப்பா வேண்டியபொருள் வந்து சேருமப்பா வேதனை யளித்திடும் நோய் தீருமப்பா தாண்டினோர் வீடுவந்து சேர்வாரப்பா தப்பாது பெண் குழந்தை பிறக்குமப்பா தூண்டியின் மீன்போலே துடித்திடாதே தின மைந்தில் உனதுயெண்ணம் பலிக்கும்பாரே! |
ஆரூடத்தில் ஒன்பது வந்தால்,அப்பனே உனக்கு ஆண்டவனுடைய கருணை இருப்பதால் இனி நீ எதைச் செய்தாலும் லாபம் கிடைக்கும். தேவையான பொருட்கள் எல்லாம் வந்து சேரும். வேதனை கொடுக்கும் நோய் தீர்ந்து போகும். பெண் வாரிசு கிடைக்கும். தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிக்காதே, இந்த ஆரூடம் பார்த்த நாளில் இருந்து ஐந்தாவது நாளில் உன் எண்ணம் எல்லாம் பலிக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 9 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஜோதிடம், ஆரூடப், ஆரூடங்கள், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், பெண், கிடைக்கும், நாளில், நோய், எல்லாம், வந்தால், horary, உனக்கு, வந்து, வேதனை