ஆரூடப் பாடல் 8 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம்
௮. (08) வந்தால்..
அண்டமதில் துன்பமிகு கொண்டிடாதே அன்பில்லா நெஞ்சரிடம் உறவாடாதே கண்டபடி கவனமதை செலுத்திடாதே கவலையெல்லாம் போகுமிந்த வாரத்தோடே பெண்டுபிள்ளை குடும்பமுடன் சுகமிகுந்தே பிணிவிலகும் தொழில்பெருகும் தவறிடாதே மண்டலத்தில் மகிழ்வுடனே வாழ்குவாயே மச்சமொன்று அடையாளம் முதுகிற்பாரே. |
ஆரூடத்தில் எட்டு வந்தால், உலகில் உனக்கு மட்டுமே இவ்வளவு துன்பம் என்று கவலை கொள்ளாதே. அன்பு இல்லாதவர்களிடம் உறவாடாதே. இந்த ஆருடம் பார்த்த இந்த வாரத்துடன் கவலை எல்லாம் போகும். மனைவி பிள்ளைகளுடன் சுகமுடன் வாழலாம். நோய்கள் நீங்கும். தொழில் பெருக்கும் இன்னும் ஒரு மண்டல காலத்தில் மிகவும் மகிழ்ச்சியுடன் வாழ்வாய். இதற்கு அடையாளமாக உன் முதுகில் ஓர் மச்சமுமிருக்கும் என்கிறார் அகத்தியர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஆரூடப் பாடல் 8 - ஸ்ரீஅகத்தியர் ஆரூடச் சக்கரம், ஆரூடங்கள், ஜோதிடம், ஆரூடப், சக்கரம், பாடல், ஸ்ரீஅகத்தியர், ஆரூடச், கவலை, உறவாடாதே, horary, வந்தால்