ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்ற பாடத்தில் திருமணப் பொருத்தம் பார்க்கும்போது ஜாதகத்திலுள்ள நிறை, குறை களைப் பார்ப்பது முக்கியமென்றும், வெறும் தசப் பொருத்தம் மட்டும் பார்த்துத் திருமணம் செய்வது பயனில்லை எனவும் எழுதி இருந்தோம். உதாரண ஜாதகம் கொடுத்து நமது அனுபவங்களை நாம் எழுதி இருந்தோம். ஜாதகத்தில் மற்றொறு முக்கியமான அம்சம் “புனர்ப்பூ” என்னும் தோஷம்தான். நாம் இத்தோஷத்தைப் பற்றி ஏற்கனவே நமது பாடங்களில் எழுதி இருக்கிறோம். இருப்பினும் இப்போது அதைப் பற்றி விரிவாக எழுதுவோம்.
ஜாதகத்தில், சனியும் சந்திரனும் சேர்ந்து இருந்தாலோ, அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டாலோ, அல்லது சனியின் சாரங்களான பூசம், அனுஷம், உத்திரட் டாதி ஆகிய நட்சத்திரங்களில் சந்திரன் இருந்து, சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவற்றில் சனியும் இருந்தால் அதற்குப் “புனர்ப்பூ” எனப் பெயர். இந்த தோஷத்திற்கும், திருமணத்திற்கும் மிகுந்த சம்மந்தம் உள்ளது. இது திருமணத்தை மிகுந்த தாமதப் படுத்தும். நிச்சயம் ஆனால் கூட திருமணம் நின்றுபோகும் அளவிற்கு தோஷத்தைக் கொடுக்கும்.
சந்திரன் சுமார் 27 நாட்களுக்கு ஒருமுறை 12 ராசிகளையும் சுற்றி வருகிறார். அந்த 27 நாட்களில் சனி இருக்கும் ராசியில் சுமார் 2ட நாட்கள் சஞ்சாரம் செய்வார். அந்த 2ட நாட்களில் இந்த தோஷம் ஏற்படுகிறது. அதைப் போல் சனிக்கு 7-ம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யும் போது அந்த 2ட நாட்களிலும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வார்கள். அப்போதும் இந்த தோஷம் ஏற்படுகிறது. ஆக ஒரு மாதத்தில் 4ண நாட்கள் நிச்சயமாக இந்த தோஷம் ஏற்படுகிறது. இந்த 4ணநாட்களிலும் பிறந்தவர்களுக்கு இந்த தோஷம் காரணமாக பாதிப்பு ஏற்படுமா? என்றால் நிச்சயம் பாதிப்பு உண்டாகும். அவர்கள் இந்த தோஷத்தின் பாதிப்பை அனுபவித்தே ஆக வேண்டும்.
உதாரணத்திற்கு ஒரு ஜாதகத்தைப் பார்ப்போம். இவர் ஒரு மருத்துவர். நம் நாட்டில் கூட இல்லை; வெளி நாட்டில் மருத்துவர். மிகுந்த வசதியுள்ள குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். அவருக்கு சில வருடங்களாகப் பெண்பார்த்து வந்தனர். சரியாக அமையவில்லை. சில மாதங்களுக்கு முன்பு பெண் பார்த்து ஒரு பெரிய ஹோட்டலில் நிச்சயமும் ஆயிற்று. நிச்சயமும் வெகு விமர்சையாக நடந்தேறியது. ஆனால் அது திருமணத்தில் முடியவில்லை. ஏதோ காரணங்களால் திருமணம் நடக்கவில்லை; நின்று போயிற்று. அநத ஜாதகத்தை நாம் இப்போது பார்ப்போம். இதைப் போல் பலருக்குப் பலவிதமான நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆகவே ஜாதகத்தைப் பார்த்தவுடன் அதில் புனர்ப்பூ இருக்குமேயானால் திருமணத்தில் பிரச்சனை உண்டு என தீர்மானித்து விடலாம். இதற்குப் பரிகாரம் உண்டா என உடனே கேட்பார்கள். ஏனெனில் பிரச்சனை இருந்தால் அதில் பரிகாரத்தையும் எதிர்பார்ப்பது மனிதர்களின் இயல்புதானே! சனிக்கும், சந்திரனுக்கும் பரிகாரம் செய்து பார்க்கலாம். சனிக்கும், சந்திரனுக்கும் என்னென்ன பரிகாரங்கள் உண்டோ அதையெல்லாம் செய்து பார்க்கலாம். நடப்பது நடக்கட்டும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 49 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, ஜோதிடப், தோஷம், அந்த, ஏற்படுகிறது, மிகுந்த, சந்திரன், திருமணம், நாம், எழுதி, ஜோதிடர், நீங்களும், பாடம், ஆகலாம், ஜோதிடம், ஜாதகத்தைப், பாதிப்பு, போல், சஞ்சாரம், பார்ப்போம், அதில், சனிக்கும், சந்திரனுக்கும், செய்து, பார்க்கலாம், பரிகாரம், பிரச்சனை, நாட்டில், நிச்சயமும், திருமணத்தில், நாட்கள், மருத்துவர், இருந்தால், “புனர்ப்பூ”, பற்றி, இப்போது, ஜாதகத்தில், நமது, பாடங்கள், பொருத்தம், இருந்தோம், அதைப், சனியும், நிச்சயம், சுமார், நாட்களில், பார்த்துக், ஒருவர், அல்லது, ஒருவரை, ராசியில்