ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்றபாடத்தில் நாம் மாந்தியைப் பற்றித் தெரிந்து கொண்டோம். நாம் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை. அதற்குண்டான காரணங்களையும் சென்ற பாடத்தில் எழுதி இருந்தோம். இந்தப் பாடத்தில் சில யோகங்களைப் பற்றிப் பார்ப்போம். நீங்கள் சிலர் ஜாதகப் பலன்கள் சொல்லும்போது இந்த யோகங்களுக்கு மிக முக்கியத்துவம் கொடுப்பதைப் பார்த்து இருப்பீர்கள். யோகம் என்றால் ராஜ யோகம் எனறு நினைத்து விட வேண்டாம். யோகங்கள் இருந்தால் வாழ்க்கையே சொர்க்கமாகிவிடும் என்ற எண்ணமும் வேண்டாம். யோகங்கள் என்றால் கிரக சேர்க்கை என்று பொருள். அவ்வளவுதான். மரணயோகத்தையும் யோகம் என்றுதான் குறிப்பிடுகிறோம். ஆகவே யோகம் என்றால் மிக அதிர்ஷ்டத்தைக் கொடுக்கக் கூடியது என்று நினைக்க வேண்டாம். சிலருக்கு ராஜயோகச் சேர்க்கை இருக்கிறது எனக் கொள்வோம். "இந்த கிரகச் சேர்க்கை எப்போது பலந்தரும்? ஆயுள் முழுவதும் பலன் தருமா?" என்ற கேள்விக்குச் சரியான விடை கிடைப்பது இல்லை. இருப்பினும் யோகத்தைப் பற்றி எழுதாவிட்டால் நமது பாடங்கள் நிறைவு பெறாது என்ற எண்ணத்தில்தான் எழுதுகின்றோம்.
முதலில் நாம் எடுத்துக் கொண்டுள்ள யோகம் "கஜகேசரி யோகம்". ஒருவர் ஜாதகத்தில் குருவானவர் சந்திரனுக்குக் கேந்திரஸ்தானமான ஒன்று, அல்லது நாலு அல்லது ஏழு அல்லது 10ம் வீடுகளில் இருத்தல்; அதாவது ஜாதகத்தில் சந்திரனுடன் சேர்ந்து இருக்கலாம்; அல்லது சந்திரனிலிருந்து 4-ம் வீட்டிலோ அல்லது 7-ம் வீட்டிலோ அல்லது 10-ம் வீட்டிலோ இருக்கலாம். அவ்வாறு வீற்றிருந்தால் இதை "கஜகேசரி யோகம்" என்றழைப்பார்கள். சரி! இது இருந்தால் என்ன பலன்? நமது ஜோதிட நூல்கள் கூறி இருப்பதைப் பார்ப்போம். நல்ல பெயரும், புகழும் கிடைக்கும். தீர்க்க ஆயுளுடன் இருப்பர். பணப்புழக்கம் நன்றாக இருக்கும். பகைவர்களை வெற்றி கொள்வார்கள். இந்தப் பலன்களைப் பார்க்கும்போது இது ஒரு சுப யோகமாகாவே தெரிகிறது. பல ஜாதகங்களைப் பார்க்கும்போது நல்ல வசதியான வாழ்க்கை உடையவர்களாகவே விளங்கி இருக்கிறார்கள். ஆகவே இந்த யோகம் உள்ளவர்களை நாம் பலன் சொல்லும்போது அதிர்ஷ்டசாலிகள் என்றழைக்கலாம்.
சந்திர மங்கள யோகம்:- செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருத்தல்; அதாவது ஒரு ஜாதகத்தில் செவ்வாயும், சந்திரனும் சேர்ந்து இருப்பார்களேயாகில் இந்த யோகம் உண்டாகிறது. இதன் பலன்கள்: முறையற்ற காரியங்கள் மூலம் பணம் சம்பாதிப்பர். தன் தாயரைக் கடின சொற்கள் மூலம் கடிந்து கொள்வர். அதேபோல் செவ்வாயும் சந்திரனும் ஒன்றை ஒன்று பார்த்துக் கொண்டாலும் இந்த யோகம் உண்டாகிறது. இந்த சந்திரமங்கள யோகம் இருப்பவர்கள் சற்று முன் கோபிகளாக இருப்பதை நாம் அனுபவத்தில் பார்த்து இருக்கிறோம்.
சுனபா யோகம்:- சந்திரன் இருக்கும் வீட்டிற்கு அடுத்த வீட்டில் சூரியனைத் தவிர வேறு ஏதாவது கிரகங்கள் இருத்தல்; இவ்வாறு இருந்தால் அது சுனபா யோகம் எனப்படும். இந்த யோகத்தின் பலன்கள்: சுயமாகச் சொத்துச் சேர்க்கமுடியும். நல்ல பெயருடனும், புகழுடனும் வாழ முடியும். நாம் நம் அனுபவத்தில் பார்க்கும்போது சந்திரனுக்கு அடுத்த வீட்டில் ஏதாவது கிரகம் இருந்தால் ஒருவர் சொத்துக்கள் சேர்த்து முன்னுக்கு வந்துவிடுவது இல்லை. ஆகவே இந்த யோகத்தை அப்படியே எடுத்துக் கொண்டு பலன் சொல்ல வேண்டாம். நம்மை எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும்.
அனபாயோகம்:- சந்திரனுக்குப் 12-ம் வீட்டில் சூரியனைத்தவிர ஏதாவது கிரகம் இருத்தல்; நல்ல புகழுடன் கூடிய வாழ்க்கை கிடைக்கும். இந்த யோகமும் அனுபவபூர்வமாகப் பார்க்கும்போது சரியாக வரவில்லை; இருப்பினும் வாசகர் களுக்குத் தெரிந்து இருக்கட்டுமேயென்று எழுதினோம். சந்திரனுக்குப் பக்கத்து வீட்டில் கிரகங்கள் இருந்தால் சுனபா யோகமென்றும், அனபாயோகமென்றும் பார்த்தோம். கிரகங்களே இல்லாமல் தனித்து இருந்தால்? அதற்குக் "கேமத்திரும யோகம் " என்று பெயர். இந்த யோகமுள்ளவர் ஏழ்மை நிலையில் இருப்பர். நற்காரியங்களில் ஈடுபடமாட்டார். பணத்தைக் கையாடல் செய்பவர்; இப்படியெல்லாம் ஜோதிட உலகம் கூறுகிறது.
அதி யோகம்:- குரு, புதன், சுக்கிரன் இவைகளெல்லாம் சுப கிரகங்கள். இவைகள் சந்திரனுக்கு 6, 7, 8 -ம் வீடுகளில் இருந்தால் அதற்கு அதியோகமென்று பெயர். இந்த மூன்று கிரகங்களும் ஏதாவது ஒரு வீட்டில் இருக்கலாம்; அல்லது இரண்டு வீடுகளில் இருக்கலாம்; அல்லது மூன்று வீடுகளிலும் இருக்கலாம். மூன்று கிரகங்கள் இல்லாவிட்டாலும் ஏதாவது இரண்டு கிரகங்களாவது இருந்தாலும் அதுவும் அதியோ கம்தான். இதற்குப் பலன் என்ன? அந்த ஜாதகர் மிகவும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வர். நீண்ட ஆயுளுடன், தன்னை எதிர்த்தவர்களை வென்று நல் வாழ்க்கை வாழ்வர். இந்தப் பலன்கள் சரியாக வருகின்றனவாவென்று ஜாதகத்தைப் பரிசோதித்துப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
சகட யோகம்:- சந்திரனுக்கு 6, 8, 12-ம் வீடுகளில் குரு இருந்தால் இதற்குச் சகட யோகமென்று பெயர். இந்த மாதிரி அமைப்புடையவர் அதிர்ஷ்டமில்லாதவர். கஷ்ட ஜீவனமுள்ளவர்; மிகவும் பிடிவாதகுணமுள்ளவர்; அதனால் பலராலும் வெறுக்கப்படுபவர்.
அமல யோகம்:- இலக்கினத்திற்கோ அல்லது சந்திரனுக்கோ பத்தாம் வீட்டில் ஒரு சுபகிரகமிருந்தால் அதற்கு அமல யோகமென்று பெயர். இதற்குப் பலன் என்னவென்றால் நல்ல பெயருடனும், புகழுடனும் வாழ்க்கை அமையும்.
ஹம்ச யோகம்:- குருவானவர் கேந்திர ஸ்தானங்களில் இருந்து அது அவரின் சொந்த வீடாகவோ அல்லது உச்ச வீடாகவோ இருக்குமேயாகில் அது ஹம்ஸ யோகத்தைக் கொடுக்கும். இந்த யோகமுள்ளவர் நற்குணங்களோடு நல்வாழ்வு வாழ்வர். நல்ல அழகுள்ள சரீரத்தை உடையவராக இருப்பர்.
மாளவியா யோகம்:- குருவைப்போல் சுக்கிரனும் சொந்த வீட்டிலோ அல்லது உச்ச வீட்டிலோ இருந்தால் அது கேந்திர ஸ்தானமாக இருந்தால் இந்த யோகத்தைக் கொடுக்கிறது. நல்ல அழகிய உருவ அமைப்பையும், வாகன யோகத்தையும், நல் மனைவியையும் கொடுக்கும். அதாவது சுக்கிரன் காரகத்துவம் வகிக்கின்றவைகளெல் லாம் நன்றாக அமையும்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 40 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, யோகம், அல்லது, இருந்தால், நல்ல, ", வீட்டில், நாம், பலன், ஜோதிடப், வாழ்க்கை, வீட்டிலோ, ஏதாவது, இருக்கலாம், வேண்டாம், பெயர், கிரகங்கள், பலன்கள், இருத்தல், வீடுகளில், பார்க்கும்போது, இருப்பர், செவ்வாயும், சேர்ந்து, அதாவது, ஜாதகத்தில், மூன்று, வாழ்வர், ஆகவே, இந்தப், சந்திரனும், தெரிந்து, ஜோதிடம், பாடங்கள், சுனபா, ஜோதிடர், சேர்க்கை, பாடம், சந்திரனுக்கு, என்றால், நீங்களும், ஆகலாம், சரியாக, பெயருடனும், கிரகம், புகழுடனும், சந்திரனுக்குப், இரண்டு, சொந்த, கேந்திர, வீடாகவோ, உச்ச, கொடுக்கும், யோகத்தைக், அமையும், யோகமென்று, சுக்கிரன், குரு, அதற்கு, இதற்குப், மிகவும், யோகமுள்ளவர், என்ன, இருப்பினும், இல்லை, நமது, எடுத்துக், கஜகேசரி, யோகங்கள், பார்த்து, முக்கியத்துவம், பாடத்தில், பார்ப்போம், சொல்லும்போது, யோகம்", ஒருவர், இருக்கும், உண்டாகிறது, மூலம், அனுபவத்தில், நன்றாக, ஆயுளுடன், குருவானவர், ஒன்று, ஜோதிட, கிடைக்கும், அடுத்த