ஜோதிடப் பாடம் – 22 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
5-ம் வீடு புத்திர ஸ்தானம் என்று தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் பாபகிரகங்கள் இருப்பது நல்லதில்லை எனவும் தெரிந்து கொண்டீர்கள். 5-ம் வீட்டில் ராகு இருந்தாலும், 5-ம் வீட்டதிபர் ராகுவுடன் கூடினாலும் அது சார்ப்ப தோஷம் என்று கூறுவார்கள். அதாவது சர்பத்தின் சாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. கேது இருந்தால் பிராமணசாபத்தால் புத்திர தோஷம் உண்டாயிற்று. நாம் இதுவரை மாந்தியைப் பற்றி எழுதவில்லை; கேரள ஜோதிடத்தில் மாந்திக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். மாந்திக்கு நட்சத்திரங்களோ, தசா புக்திகளோ இல்லாததால் நாம் அவ்வளவு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை; நாம் வரும் பாடங்களில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதற்காக அதைப் பற்றி விரிவாக எழுதுகின்றோம். நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள். இப்போதைக்கு மாந்தி 5-ம் வீட்டில் இருப்பது நல்லது இல்லை என்று தெரிந்து கொள்ளுங்கள். 5-ம் வீட்டில் சந்திரன், சுக்கிரனுடன் மாந்தியும் இருந்தால் ஸ்திரிஹத்தி தோஷமும், பசுஹத்தி தோஷமும் ஏற்பட்டு புத்திர உற்பத்தி தடைப்படும். அதே போன்று புத்திர காரகனான குருவுடன் மாந்தி சேர்ந்து இருந்தால் பிராமண சாபத்தால் புத்திர உற்பத்தி தடையுறும். சரி! இவ்வாறு இருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? இவ்வாறு தோஷமுள்ளவர்கள் சேது ஸ்னானம், நாகப் பிரதிஷ்டை செய்தல், அரசமரப் பிரதஷ்ஷணம் செய்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும். இவைகள்தான் இதற்குப் பரிகாரங்கள்.
பெண்ணில் ஜாதகத்தில் 5-ம் இடம்மிக முக்கியமானதாகும். ஏனெனில் குழந்தையைப் பெறப் போகிறவள் அவள்தான். அந்ட்த 5-ம் வீட்டிலே செவ்வாய் இருப்பதோ பார்ப்பதோ அவ்வளவு நல்லது இல்லை; செவ்வாய் ஆயுதங்களுக்கு அதிபதியல்லவா? ஆக குழந்தை பிறக்கும் சமயத்தில் ஆயுதம் உபயோகிக்க வேண்டியது இருக்கும். அதாவது இந்தக் காலத்திலே Scissorian - என்று சொல்லுகின்றார்களே அவ்வாறு குழந்தை பிறப்பு இருக்கும். பித்ருகாரகன் சூரியன். அவன் 5-ம் வீட்டில் நீச்சனாகி பாப கிரகங்களுடன் கூடியிருந்தால் பித்ரு சாபத்தால் குழந்தைகள் இருக்காது என்று "சராவளி" (ஒரு ஜோதிட நூல்). கூறுகிறது. சூரியன் 5-ம் வீட்டிற்குடையவனாகி இரண்டு பாபக்கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும் பித்ருசாபமாகும். 5-க் குடையவன் 9-ம் வீட்டிலும், 9-ம் வீட்டிற்குடையவன் 5-ம் வீட்டிலும் இருந்து பாபகிரகங்களின் சேர்க்கை பெற்றால் அதுவும் பித்ருசாபம்தான். 9-ம் வீடு பித்ரு ஸ்தானம் அல்லவா? ஆகவே பித்ருஸ்தானாதிபதி கெடக் கூடாது என்கிறது "சராவளி". இந்தப் பித்ரு சாபத்தைப் போக்க வேண்டுமென்றால் "கயா" வில் ஸ்ரார்த்தம் செய்ய வேண்டுமென்பது விதி. பொதுவாக புத்திர ஸ்தானத்தில் பாபகிரகங்கள் இருப்பது புத்திர உற்பத்தியைக் குறைக்கும்.
நமக்குத் தெரிந்த ஜாதகத்தைக் கொடுக்கின்றோம். குறித்துக் கொள்ளுங்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 22 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, புத்திர, வீட்டில், ஜோதிடப், தெரிந்து, இருந்தால், பித்ரு, கொள்ளுங்கள், நாம், தோஷம், சாபத்தால், இருப்பது, ", ஜோதிடர், நீங்களும், பாடம், ஜோதிடம், ஆகலாம், சேர்ந்து, இவ்வாறு, சராவளி", உற்பத்தி, தோஷமும், செய்தல், செய்ய, செவ்வாய், வீட்டிலும், இருக்கும், இல்லை, சூரியன், குழந்தை, பற்றி, பாபகிரகங்கள், இருந்தாலும், கொண்டீர்கள், ஸ்தானம், பாடங்கள், வீடு, அதாவது, உண்டாயிற்று, நீங்கள், மாந்தி, அவ்வளவு, முக்கியத்துவம், மாந்திக்கு, நல்லது