ஜோதிடப் பாடம் – 16 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
குரு : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். குடும்பம் விருத்தியாகும். பொதுவாக 2-ம் வீட்டில் குரு நன்மையையே செய்யும்.
சுக்கிரன் : பணப் புழக்கம் நன்றாக இருக்கும். மிக இனிமையாகப் பேசுவார். சிலருக்குப் பெண்களாலும், வாகனங்களாலும் வருமானம் உண்டு.
சனி : பணப்புழக்கம் மிகக் குறைவாக இருக்கும்.வேலைக்கேற்ற ஊதியம் கிட்டாது. குடும்ப வாழ்க்கை சுகமாக இருக்காது. பலருடன் கலந்து பழகத்தெரியாதவர்.
ராகு : குடும்பத்தில் குழப்பம் இருக்கும். கண்பார்வையில் கோளாறு ஏற்படும். ராகுவுடன் நல்ல கிரகங்கள் சேர்ந்தாலோ அல்லது பார்த்தாலோதான் நன்மை ஏற்படும்.
கேது : கடுமையகப் பேசக் கூடியவர். பண நஷ்டம் ஏற்படக் கூடும்.
2-ம் வீட்டைப் பற்றி " ஜாதகதத்துவத்தில்" என்ன சொல்லி இருக்கிறது எனப்
பார்ப்போம். பணக்காரன் ஆகும் யோகம்:-
1. இலக்கினாதிபதியும் லாபாதிபதியும் சேர்ந்து தனஸ்தானத்தில் இருத்தல்.
2. 2-ம் வீட்டு அதிபரும், 10-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து கேந்திரஸ்தானத்தில் இருத்தல்.
3. 10-ம் வீட்டு அதிபரும், 11-ம் வீட்டு அதிபரும் சேர்ந்து இருத்தல்.
4. ஒரு ஜாதகத்தில் 4-கிரகங்கள் சொந்த வீட்டில் இருத்தல்.
5. 2-ம் வீட்டிற்குடையவன் 9, 10, 11- வது வீட்டில் இருத்தல்.
6. சந்திரனும், செவ்வாயும் சேர்ந்து ஒரே வீட்டில் இருத்தல். இதைச் சந்திரமங்கள யோகம் என்பார்கள்.
7. கேந்திரஸ்தானம் என்று சொல்லுகின்ற 1, 4, 7, 10-ம் வீடுகளில் சுபகிரகங்கள் இருத்தல்.
8. குரு தன் சொந்த வீட்டிலும், 5-ம் வீட்டில் சந்திரனும் இருத்தல்.
9. சூரியன் சிம்மத்திலும், குருவும், செவ்வாயும் 1-ம் வீட்டிலும் இருத்தல்.
10. கீழே புதையல் கிடைப்பதற்கான யோகத்தைக் கீழே கூறி இருக்கிறார்.
11-ம் வீட்டு அதிபதி இலக்கினத்திலும், இலக்கினாதிபதி 2-ம் வீட்டிலும், 2-ம் வீட்டு அதிபதி 11-ம் வீட்டிலும் இருந்தால் புதையல் கிடைக்கும். (இந்தக் காலத்தில் புதையல் கிடைப்பது என்பது அரிது. லாட்டரி, ரேஸ் போன்ற வற்றிலிருந்து பணவரவு இருக்குமெனக் கொள்ளலாம்)
இவ்வாறாக ஜாதக தத்துவம் பல்வேறு கிரக நிலைகளைக் கூறி இருக்கிறது. இரண்டாம் இடத்தை வாக்குஸ்தானம் என்று கூறி இருக்கிறோம் அல்லவா? 2-ம் வீடு ஊமை ராசிகளாகி (கடகம், விருச்சிகம், மீனம் ஆகியவை ஊமை ராசிகளாகும்) அதில் கேது இருப்பாரேயாகில் அந்த ஜாதகர் ஊமையாகப் போகக் கூடிய வாய்ப்பு உண்டு. 2-ம் வீட்டில் சந்திரன் இருந்து புதன் பார்ப்பாரேயாகில் அந்த ஜாதகர் மிகவும் தெளிவாகப் பேசுவார். சுக்கிரன் பார்ப்பாரேயாகில் சினிமா, டிராமா போன்ற பொழுதுபோக்கு அம்சங்களையும், மற்றும் பால் உறவினைப்பற்றியும் அதிகமாகப் பேசுவர். சனி பார்த்தாரேயாகில் சொற்பமாகப் பேசுவார். சூரியன் பார்த்தால் மிகவும் கண்ணியமாகப் பேசுவார்.
2-ம் இடத்தைவைத்து ஒருவரின் 2-ம் கல்யாணத்தைப் பற்றிக் கூறவேண்டும். திருமணத்தைப் பற்றி எழுதும்போது நாம் 2-ம் கல்யாணத்தைப் பற்றி எழுதுவோம்.
மற்றவைகளை அடுத்த பாடத்தில் பார்ப்போம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 16 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, இருத்தல், வீட்டில், வீட்டு, ஜோதிடப், சேர்ந்து, பேசுவார், வீட்டிலும், அதிபரும், இருக்கும், ஆகலாம், கூறி, புதையல், குரு, ஜோதிடம், நீங்களும், ஜோதிடர், பாடம், பற்றி, செவ்வாயும், சூரியன், அந்த, மிகவும், கல்யாணத்தைப், பார்ப்பாரேயாகில், ஜாதகர், அதிபதி, சந்திரனும், கீழே, இருக்கிறது, நன்றாக, சுக்கிரன், புழக்கம், பணப், பாடங்கள், உண்டு, ஏற்படும், யோகம், பார்ப்போம், கேது, கிரகங்கள், சொந்த