ஜோதிடப் பாடம் – 13 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!
சென்னையில் ஒரு பெரிய பணக்காரருக்கு, ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது. அதே சென்னையில் ஒரு கூலித் தொழிலாளிக்கு அதே நேரத்தில் ஒரு ஆண்குழந்தை பிறக்கிறது. நேரத்தில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆக ஜாதகத்தில் எந்த வித மாற்றமும் இருக்காது. இருவர் ஜாதகமும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. அப்படியானால் இருவரின் வாழ்க்கையும் ஒரே மாதிரித்தான் இருக்குமா ? இல்லை பணக்காரக் குழந்தை நல்ல சூழ்நிலையில் வளரப் போகிறது. ஏழைக் குழந்தை ஏழ்மைச் சூழ்நிலையில் வளரப் போகிறது. இதற்கு ஜோதிடம் தரும் விளக்கம் என்ன? இதற்கு நாம் ஒரு சிறிய விளக்கம் கொடுப்போம். இந்தக் குழந்தைகள் வளர்ந்து பெரிதாகின்றன எனக் கொள்வோம். பணக்காரக் குழந்தை ஒரு தொழிற்சாலைக்கு அதிபதி ஆகிறான். ஏழைக் குழந்தை சிறு தொழிலில் ஒரு இறும்புப் பட்டரை வைத்துள்ளான் எனவும் கொள்வோம். நல்ல திசையில் பணக்காரனுக்கு பல லட்சம் ரூபாய் லாபம் கிடைத்து இருக்கலாம். அதே ஏழைக்கு அந்த நல்ல திசையில் சில நூறு ரூபாய் லாபமாகக் கிடைத்து இருக்கலாம். இருவருக்கும் பணத்தை ஒப்பிட்டுப் பார்க்கும்போது மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் தெரிகிறது. ஆனால் இருவரின் சந்தாஷத்தையும் அளவிட்டால் ஒரே அளவாகத்தான் இருக்கும். பல லட்சங்கள் அடைந்த பணக்காரனின் சந்தோஷத்தை அந்த ஏழை சில நூறு ரூபாய்களில் அடைந்து விடுகிறான். அதாவது இருவர் அடையும் சந்தோஷமும் ஒன்று தான். இவ்வாறு ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்தால் மனத்தளவில் ஒரே மாதிரியான சந்தோஷமும் துக்கமும் அடைவார்கள். இவ்வாறாக அவர்கள் வழ்க்கையில் ஒற்றுமை இருக்கும். பணத்தை வைத்து அளவிட முடியாது. நாம் யாருக்கு மகனாகப்பிறக்கிறோம் என்பது நம் கையில் இல்லை; நாம் எந்த ஊரில், எந்த நாட்டில் பிறக்கிறோம் என்பது நமது கையில் இல்லை. ஆகவே நாம் பிறக்கின்றபோதுள்ள பொருளாதார நிலையை வைத்துக் கொண்டு வரப்போகின்ற உயர்வு, தாழ்வுகளைக் கூற வேண்டும். நிற்க. இனி நாம் நம் படத்திற்கு வருவோம்.
ராசிகளின் குணங்களுக்குத் தக்கவாறு அவைகள் பிரிக்கப் பட்டு இருக்கின்றன. ஏற்கனவே சென்ற பாடத்தில் சில குணாதிசயங்களைப் பார்த்தோம். இப்போது மீதமுள்ளவற்றைப் பார்ப்போம். முதலில் சர ராசிகளைப் பார்ப்போம்
சர ராசி : மேஷம், கடகம், துலாம், மகரம் ஆகிய நான்கு ராசிகளும் சரராசிகளெனப்படும். இந்த ராசிக்காரர்கள் அடிக்கடி மாற்றத்தை விருப்புவார்கள். மிகவும் சுறுசுறுப்பு மிக்கவ்ர்கள். எந்தக் கஷ்டத்தையும் சமாளித்து முன்னுக்கு வருபவர்கள். சுயேச்சையாக இருக்க விரும்பிபவர்கள். மற்றவர்களுக்குக் கீழ் இருக்க விருப்பப்பட மாட்டார்கள்.
சரராசி 2-ம் வீடாக இருந்தால் என்ன பலன் என்று பார்ப்போம். ஒரே சீராகப் பணவரவு இருக்காது. ஒரு சமயம் அதிகமாக இருக்கும். ஒரு சமயம் குறைவாக இருக்கும். வியாபாரம் செய்யத் தகுந்தவர்கள் இவர்கள். வியாபாரத்தில்தானே வரவு ஒரே மாதிரியாக இருக்காது.
3-ம் வீடு சர ராசியாக இருந்தால் அவர்கள் வெளியூர்ப் பயணத்தை விருப்புவர். மூன்றாம் வீடு வெளியூர்ப் பயணத்தைக் குறிக்கிறது அல்லவா? இந்த ராசிக்காரர்கள் தான் நினைத்ததை முடிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்கள்.
ஸ்திர ராசி : மிகுந்த நிதானத்துடனும், தன்நம்பிக்கையுடனும் செயல்படுபவர்கள். நிரந்தரமான வரவு இவர்களுக்கு உண்டு. ஸ்திர ராசி 6-ம் வீடாக இருந்து ஒருவருக்கு வியாதி வருமேயானால் பரம்பரையான வியாதி வருவதற்கு வழியுண்டு. குணம் ஆகாத வியாதிகள் ஆஸ்த்மா, சர்க்கரை போன்றவியாதிகள் வரக்கூடும். 3-ம் இடம் ஸ்திர ராசியாக இருப்பின் வெளியூர் செல்வதை விரும்ப மாட்டார். ஸ்திர ராசியிலுள்ள தசா, புக்தி காலங்களில் ஒருவருக்கு வேலையில் நிரந்தரம் ஆகும். மிகவும் நிதானமாகச் செயல் படும் தன்மை கொண்டவர்கள் இவர்கள்.
உபய ராசி : உறுதியான எண்ணத்துடன் இருக்க முடியாதவர்கள். எண்ணத்தை அடிக்கடி மாற்றக் கூடியவர்கள். சண்டை, வாக்குவாதம் ஆகியவற்றை வெறுப்பவர்கள். கஷ்டமான வேலையைக் கண்டு மலைப்பவர்கள். நரம்பு சம்மந்தமான வியாதிகள் இவர்களைத் தாக்கும். இவர்கள் உறுதியான எண்ணங்கள் இல்லாததால் அடிக்கடி தங்கள் எண்ணங்களை மாற்றிக் கொண்டே இருப்பர்கள். இவர்கள் ஏஜென்சித் தொழிலுக்கு ஏற்றவர்கள்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
ஜோதிடப் பாடம் – 13 - நீங்களும் ஜோதிடர் ஆகலாம்!, குழந்தை, ஜோதிடப், நாம், ஸ்திர, இல்லை, ராசி, இவர்கள், எந்த, ஜோதிடம், இருக்கும், ஜோதிடர், நல்ல, அடிக்கடி, பாடம், நீங்களும், ஆகலாம், பார்ப்போம், இருக்காது, இருக்க, மிகவும், என்பது, கையில், தான், ராசிக்காரர்கள், வீடு, ஒருவருக்கு, கொண்டவர்கள், வியாதி, வியாதிகள், உறுதியான, வெளியூர்ப், ராசியாக, இருந்தால், சமயம், வரவு, சந்தோஷமும், வீடாக, ரூபாய், இருக்கின்றன, இருவரின், பணக்காரக், சூழ்நிலையில், இருவர், மாற்றமும், பாடங்கள், சென்னையில், பிறக்கிறது, நேரத்தில், வளரப், போகிறது, கிடைத்து, இருக்கலாம், அந்த, நூறு, திசையில், கொள்வோம், ஏழைக், இதற்கு, விளக்கம், என்ன, பணத்தை