எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள்
* நாடகக் கலையை எப்படிக் கற்றீர்கள்?
* கொழும்பு லையன்ஸ்வென்ட் அரங்கத்தில் ஆங்கில நாடகங்கள் நடத்தப்பட்டபோது அவற்றை ஏர்னஸ்ட் மெக்கின்டைர் என்ற நாடக விற்பன்னர் தயாரித்து வந்தார். அவர் ஒரு நாடக விஞ்ஞானி அவர் இங்கிலாந்து நாட்டில் மேடையேறும் ஆங்கில நாடகத்தைச் சமகாலத்தில் இலங்கையிலும் அரங்கேறச் செய்தார். அவருடன் ஐரோப்பிய, அமெரிக்க நாடக இயக்குநர்கள் தங்கும்போது, அவர்களுக்கு நான் சேவை செய்துகொண்டு நாடக அனுபவங்களைக் கேட்பது தனி சுகம். மெக்கின்டைர் ஆதரவில் திரை தூக்குவதில் ஆரம்பித்து, நாடக நெறிப்படுத்தலை என்னிடம் முழுமையாக நம்பி அவர் ஒப்படைக்கும் வரை நம்பிக்கையாகக் கடமை செய்தேன். இந்த நேரத்தில்தான் ஷேக்ஸ்பியர், பிரெக்ட், சாமுவேல், பெக்கெட், இப்சன், ஆஸ்கார் ஒயில்ட், டென்னிஸ’ வில்லியம் போன்ற சிறந்த நாடகாசிரியர்களின் நாடகத் தயாரிப்புகளில் ஈடுபட்டேன். பின்னர் அக்கொய்னர் பல்கலைக் கழகத்தில் இரண்டாண்டுகால நாடகப் படிப்பை மேற்கொண்டேன். படிப்பின்போது நிறைய வெளிநாட்டு இயக்குநர்களிடம் பயிற்சி பெற்றேன்.
* நாடகப் பயிற்சிக்குப் பிறகு எந்தெந்த நாடகங்களை எப்படித் தயாரித்தீர்கள்?
* மகாகவியின் 'கோடை' என்ற கவிதை நாடகம், இசை கலந்த 'புதியதோர் வீடு' போன்ற நாடகங்களைத் தயாரித்தோம். கோடை நாடகத்தை முதல் கவிதை நாடகம் என்று விமரிசகர்கள் சொன்னார்கள். புதியதோர் வீடு நாடகத்திற்காகப் பரத நாட்டிய ஆசிரியரை அழைத்தோம். அவர் பரதநாட்டியத்தை நாடகத்தில் சேர்ப்பதைக் குற்றமாகக் கருதினார். அதனால் நான் ஏழு ஆண்டுகள் 'கண்டி நடனம்' பயின்றேன். இப்படி ஒவ்வொரு துறையையும் நுணுகி நுணுகிக் கற்றுக் கொண்டேன். நான் கற்றவையோடு நாட்டுக் கூத்தின் தாள-லயத்தை இணைத்தேன். அது மிகவும் உதவியது. இவற்றை நாடகத் தயாரிப்பில் வழங்கியபோது வரவேற்புக் கிடைத்தது. எனக்குத் தன்னம்பிக்கை உண்டாயிற்று. அன்றிருந்து தாள-லயம் புதுமையானது. அதிலிருந்து புதுப்புது வடிவத்தைக் கண்டேன். இதற்கு கே.எம். வாசகர் என்ற வானொலித் தயாரிப்பாளரின் பங்கு முக்கியமானது. அவர்தான் எனது கிராமியக் கூத்துத் திரட்டல்களை நாலரை ஆண்டுகள் வானொலி மூலம் ஒலிபரப்ப எனக்கு வழிவகுத்துத் தந்தார். பிறகு வானொலி மூலம் தேடலைத் தொடரவும் முடிந்தது. அதற்கு மட்டக்களப்பு கலெக்டர் எதிர்மன்னசிங்கம் கலாச்சாரத் துறையுடன் பேசி, ஜ“ப் எடுத்துக் கொடுத்து கிராமம் கிராமமாகச் செல்ல உதவினார்.
* அப்போது ஈழத்து நாடகச் சூழல் எப்படி இருந்தது?
* அந்த நேரத்தில் நாடோடிகள், கூத்தாடிகள், அம்பலத்தாடிகள் ஆகிய மூன்று முக்கிய நாடகக் குழுக்கள் கொழும்பில் இருந்தன. ஒவ்வொருவரும் தனித்தனியாக இயங்கிப் பலவீனப்படுவதைத் தவிர்த்து ஒன்றாகச் செயல்படலாம் என்ற ஆலோசனை ஏற்கப்பட்டு மூன்று குழுக்களும் ஒன்றிணைந்தோம். நடிகர் ஒன்றியம் என்ற அமைப்பைத் துவக்கினோம். அது இலங்கை நாடக வரலாற்றில் முக்கியத்துவம் கொண்டது. அதோடு ரசிகர் அவையைத் துவக்கி 1500 பேரை உறுப்பினர்களாகச் சேர்த்தோம். அவர்களுக்கு மாதம் ஒரு நாடகம் வீதம் வழங்கினோம். இதில் கிராமப்புறக் கூத்துகளும் இடம் பெற்றது ஒரு முக்கிய அம்சம். நடிகர் ஒன்றியம் கிராமம், நகரம் இரண்டுக்கும் ஒரு பாலமாக அமைந்தது. இந்த மாதிரி நாடகங்கள் அரங்கப் பிரக்ஞை இல்லாமல் செய்யப்பட்டன.
* உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தவர்கள்..?
* நாடகப் பிரதிக்கு - கவிஞர் மகாகவி, குழந்தை சண்முகலிங்கம், நெறியாட்சிக்கு - ஏர்னஸ்ட் மெக்கின்டைர், நா. சுந்தரலிங்கம்; தமிழ்ச் செம்மைக்கு - பி.பி.சி. சங்கரண்ணா; சமுதாயப் பார்வைக்கு - இளைய பத்மனாபன், சண்முகம் முத்துலிங்கம், பேராசிரியர் கைலாசபதி, பேராசிரியர் சிவத்தம்பி. ஐரோப்பாவில் காலூன்றுவதற்கு லண்டனில் களரி அமைப்பு, ஐரோப்பாவில் பீட்டர் பிரெஸ்லர், சுவிட்சர்லாந்தில் பொன் ராஜா ஆகியோராவர்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடகப் பார்வை - நாடகக் கலைக் கட்டுரைகள், நாடக, நாடகப், நாடகக், அவர், எனது, நாடகம், கட்டுரைகள், பார்வை, கலைக், நான், மெக்கின்டைர், ஆண்டுகள், வீடு, வானொலி, மூலம், முக்கிய, பேராசிரியர், ஐரோப்பாவில், ஒன்றியம், நடிகர், மூன்று, புதியதோர், கிராமம், அவர்களுக்கு, நடனம், கலைகள், arts, drama, ஆங்கில, நாடகங்கள், கோடை, பிறகு, நாடகத், ஏர்னஸ்ட், கவிதை