எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள்
இன்று நடிகர்
நான் ஸ்ரீ சங்கரதாஸ் சுவாமிகளைச் சிவகங்கையில் ஒரு முறை பார்த்ததுண்டு. அப்போது அவர் பொன்னம்பலம் ஆசாரியார் நடத்திய சதாரம் நாடகத்திற்கு வசனமும் பாட்டும் கோத்துப் பயிற்றினார். சுவாமிகள் படிப்பும், நடிப்பும், நவரசப் பொலிவும், கலையார்வமும் கொண்டவர். அவருக்குத் திருவிழாக் காண்பது நாடகக் கலை விருந்தாகும். தமிழகத்தில் இன்று ஒளவை ஷண்முகம், பகவதி, சிவாஜி கணேசர், எம்.ஜி. ராமச்சந்திரர் போன்ற அரிய நடிகமணிகள் உள்ளனர். நாடக சங்கமும் உள்ளது. நமக்கு வேண்டியது கூட்டுறவு.
கலைஞர் கூட்டுறவு
நான் ஐரோப்பிய அமெரிக்க ஜப்பானிய நாடுகளில் ஏராளமான ஆபராக்களையும் நாடகங்களையும் திரைப்படங்களையும் பார்த்துப் பூரித்துள்ளேன். புடோவ்ஸ்கி, ஹாலிவுட், பாரிஸ் தியேட்டர் போன்ற அரும்பெரும் நாடகசாலைகளையும் படநிலையங்களையும் பாத்துள்ளேன். அங்கெல்லாம் கலைஞருள் நல்ல கூட்டுறவுள்ளது. மாஸ்கோ போல்ஷாப் தியேட்டரில் நடக்கும் இசை நாடகங்களும், பாரிஸ் தியேட்டரில் நடக்கும் இசை நாடகங்களும் கண் கொள்ளாக் காட்சிகளாகும். இங்கிலாந்தில் ஷேக்ஸ்பியர் பிறந்த ஸ்டாட்போர்டு ஆன் அவனில் திரு விழாக் கண்டேன். ஹாம்லெட், ஒதெல்லோ நாடகங்களைப் பெரும் புலவர் நடிக்கக் கண்டேன்.
நாடகக் கழகம்
அந்த மாதிரி நமது தமிழகத்தில் தக்க நடிகர் கூடி நாடகக் கழகம் ஏற்படுத்த வேண்டும்.
தக்க பயிற்சியும், படிப்பும், நடிப்பும், துடிப்பும் கொண்ட நடிகரைக் கூட்டிக் கலை வளர்க்க வேண்டும். இக்கழகம் நாடக இலக்கியங்களையும் நாடகாசிரியர்களையும் போற்ற வேண்டும். உதாரணமாக எனது நாடகங்களை இந்த நாடகக் கழகம் வெளியிட்டு அரங்கேற்றலாம். கலை மதிப்புள்ள நாடகங்களை இந்தக் கழகம் தேர்ந்து நடித்து. நாடகாசிரியருக்கு உரிய சன்மானங்களைத் தந்து போற்ற வேண்டும்.
தேர்ந்த நாடகங்களைக் கழகமே நடித்து, ஆசிரியருக்கு மரியாதை செய்ய வேண்டும்.
கலை வளர்ச்சி
இவ்வாறு ஜப்பானில் நடக்கிறது. 1952-ம் ஆண்டு தோகியோவில் "இரோஷ“மா" என்ற நாடகம் உணர்ச்சிப் படலாமாக நடந்தது. மாஸ்கோவில் அக்டோபர் புரட்சி நாடகம் என்உள்ளத்தை அள்ளியது. புதுப்புது நாடகங்கள் காலத்திற்கேற்ப வந்து புகழ்பெற்றுப் பரவினால் தமிழும் தமிழர் பண்பாடும் ஒளிபெறும்.
நாடக ஆசிரியர் தனது நிலையில் அமைதியாயிருந்து கலையை ஆக்க வேண்டும்.
அதை நாடகக் கழகம் ஏற்றுப் போற்றி வெளியிட்டு நடத்த வேண்டும்.
நாடகம் மேடையேறும்போது நாடகாசிரியனுக்குத் தக்க சன்மானம் வழங்க வேண்டும். ரஷ்யாவில் கவிகளும் நாடகப் புலவரும் செழித்து வாழ்கின்றனர். அங்கே வறுமையில்லை. வரட்சியில்லை, பொறாமையில்லை. நமது நாடு உலகப் புகழ் பெற வேண்டும். அதற்கு நாடகப் புலவர் நமது தமிழ்ப் பண்பாடுகளை þடையேற்ற வேண்டும்.
பாட்டும் பரதமும் பண்புள்ள நாடகமும்
நாட்டுக்கு நல்ல பயன்
கலையினால் உல கொற்றுமை காணுவோம்
கலையினாற் கருத்தை விரி வாக்குவோம்
கலை மகளின் கவின்பெறுங் கோவிலில்
கைகள் கோத்துக் களிப்புடம் ஆடுவோம்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
எனது நாடக அனுபவங்கள் - கவியோகி சுத்தானந்த பாரதியார் - நாடகக் கலைக் கட்டுரைகள், வேண்டும், நாடகக், நாடக, கழகம், நாடகம், எனது, தக்க, நமது, கட்டுரைகள், சுத்தானந்த, கவியோகி, அனுபவங்கள், பாரதியார், கலைக், கண்டேன், புலவர், நாடகங்களும், வெளியிட்டு, நாடகப், நடித்து, நடக்கும், நாடகங்களை, போற்ற, நடிப்பும், இன்று, நடிகர், கலைகள், arts, drama, நான், பாட்டும், பாரிஸ், நல்ல, கூட்டுறவு, தமிழகத்தில், படிப்பும், தியேட்டரில்