சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள்
பிரசார நாடகமென்றால் யாரையாவது குறை கூறுவது, யாரையாவது முன்நிறுத்தி அவமானப்படுத்துவது என்ற நோக்கத்தில் என்ற நோக்கத்தில் பாவலர் பாத்திரங்களைப் படைக்கவில்லை. இன்றைய நிலையை நாம் எண்ணிப் பார்க்கின்ற நேரத்தில் நமக்கெல்லாம் தலை குனிவாக இருக்கிறது என்பதை நான் சொல்லித்தான் தீரவேண்டும்!
காலமும் கருத்தும்
ஒரு அரசியல் கட்சியின் நல்ல தன்மைகளை எடுத்துக்கூற வேண்டுமென்றால், இன்னொரு மாற்றுக் கட்சியிலே இருக்கிற ஒரு குறிப்பிட்ட நபரை அங்கே கொண்டுவந்து நிறுத்தி, அவமானப்படுத்தும் நிலைமை இன்று சில இடங்களிலே நடைபெறுவது கண்டு, நாம் வருந்துகிறோம்; தலை குனிகிறோம். இப்படியும் நாடகங்கள் எழுதுகிறார்களே என்று வேதனைப்படுகிறோம்.
இன்று எழுதும் திறமை நன்கு வளர்ச்சி பெற்றிருக்கிறது. உரைநடை நல்ல வன்மையோடு கையாளப்படுகிறது. இந்த நாளில் பிரசார நாடகங்களை நன்றாக உருவாக்க முடியாமல் நாடக ஆசிரியர்கள் தம்முடைய திறமையை நாம் தலைகுனியும் நிலையிலே வெளிப்படுத்தகிறார்கள். இந்த நிலையை எண்ணும் போதுதான், பாவலர் அவர்களுடைய பண்பு மிக்க ஆற்றலை நம்மால் நன்கு உணரமுடிகிறது. நாட்டிலே நல்லுணர்ச்சியைப் பரப்பி, மக்களை வீரர்களாக-தியாகிகளாக மாற்றும் ஒரு கதையை அமைத்துத் தந்து, பண்புள்ள ஒரு பெண்ணையும் உருவாக்கி, அவளை நல்ல தேச சேவகியாக அமைத்துத் தருவதென்பது, அந்த நாளிலே யாரும் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத ஒரு செயற்கரும் செயலாகும்.
அன்றிருந்த வேகத்தில் மக்களுக்கு வேறு எதைப் பற்றியும் சிந்திப்பதற்கு நேரமில்லை. சுதந்திரம் வேண்டும்; அன்னிய ஆட்சி ஒழியவேண்டும். மகாத்மாவின் வழியிலே அதைப் பெற்றுத் தீர வேண்டும் என்ற ஒரே வேகத்தில் நாடு சென்று கொண்டிருந்த நேரம்.
சமூகத்தைப் பற்றிய சிந்தனை
அந்த நேரத்திலுங்கூட பாவலர் சமூகத்தைப் பற்றிச் சிந்தித்தார்; கலப்பு மணத்தைப் பற்றி எண்ணினார்; ஜாதி வேற்றுகளைக் களைந்து மக்களை ஒற்றுமைப்படுத்தக்கூடிய நல் உணர்ச்சியை அவர்களுக்குத் தரவேண்டுமென்று ஆசைப்பட்டார். இவற்றையெல்லாம் எண்ணிப் பார்க்கும் பொழுதுதான், அவர் எப்படிப்பட்ட ஒரு நல்ல நாடக ஆசிரியராக இருந்தார் என்பதை இன்று நாம் நினைத்து-நினைத்துப் பெருமைப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம்.
மூன்றாவது நாடகமாக, பாவலர் எங்கள் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனிக்குத் தந்த நாடகம் 'கவர்னர்ஸ் கப்' என்பது! இந்நாடகம் குதிரைப் பந்தயத்தால் எத்தனைக் குடும்பங்கள் நாட்டில் நாசமுறுகின்றன என்பதை எடுத்துக்காட்டுகின்ற ஒரு நாடகம்! கோடீஸ்வரனான ஒரு பணக்காரன் தன்னுடைய மனைவி மக்களின் நகைகளையெல்லாம் அடகு வைத்து, நண்பர்களால் ஏமாற்றப்பட்டு - சூதாடியாகி - தன்னுடைய வாழ்க்கையைப் பாழ்ப்படுத்திக்கொண்டு, கர்ப் பிணியான தன் மனைவியைப் பாதுகாக்கக் கூட வழியில்லாமல், பிச்சை எடுக்கவேண்டிய நிலையிலே, சின்னஞ் சிறு குழந்தைகளை விட்டு ஓட வேண்டிய நிலையிலே. கொலைகாரனாக மாற வேண்டிய நிலையிலே, எப்படியெல்லாம் žரழிந்து போகிறான் என்பதை அழகாக அந்த நாடகத்திலே சித்தரித்துக் காட்டினார். இன்று நாம் சமூக மாறுபாடுகளைப்பற்றி பல கருத்துக்களைப் பேசுகிறேன். ஆனால் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பாக, இத்தகைய சமூக நாடகங்களை அவர் எழுதித் தந்தாரென்றால், அவருடைய பெரும் உணர்ச்சியை நாம் எவ்வாறு மதிப்பிட முடியும்!
மனிதன் தெய்வமாகலாம்
சாதாரண மனிதர்களால் செய்ய முடியாத ஒரு பெரும் செயலை மனிதன் செய்து காட்டும் பொழுது, அவன் அங்கே கடவுளாக மதிக்கப்படுகின்றான். பாவலர் அவர்கள் அத்தகைய பெருஞ்செயலைச் செய்த பேராசிரியராவார். இன்று நம்முன் அவர் இல்லையென்றாலும் நாம் அவரைப் பற்றிப் பேசவேண்டிய அளவில் நினைத்துப் போற்ற வேண்டிய அளவில் - உணர்ந்து பின்பற்றக்கூடிய அளவில் ஒரு மகத்தான சாதனையை அவர் செய்திருக்கிறார். எனவே, நிச்சயமாக அவர் கடவுளாக மதிக்கப்படும் நிலைமைக்கு உயர்ந்திருக்கிறார் என்று நாம் நினைத்துப் பார்ப்பதில் தவறில்லை என்றே கருதுகிறேன்.
தேடல் தொடர்பான தகவல்கள்:
சதாவதானம் தெ.பொ.கிருஷ்ணசாமிப் பாவலர் - நாடகக் கலைக் கட்டுரைகள், பாவலர், நாம், இன்று, அவர், நல்ல, என்பதை, நிலையிலே, வேண்டிய, நினைத்துப், சதாவதானம், நாடகக், கிருஷ்ணசாமிப், கலைக், கட்டுரைகள், அந்த, அளவில், நாடகம், வேண்டும், வேகத்தில், உணர்ச்சியை, சமூகத்தைப், தன்னுடைய, கடவுளாக, மனிதன், பெரும், சமூக, முடியாத, நன்கு, யாரையாவது, நோக்கத்தில், பிரசார, கலைகள், drama, arts, நிலையை, எண்ணிப், மக்களை, அமைத்துத், நாடக, நாடகங்களை, அங்கே, செய்து